தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளி மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி கொடுவிலார்பட்டி சாலையில் உள்ள திருமலை நகர் மாவட்ட அலுவலக கட்டிடத்தில் 30.4.2024 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பெரியகுளம் சரக வட்டார தலைவர் பாண்டி லட்சுமி, செயலாளர் குபேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட செயலாளர் தீனன் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில், மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆசிரியர் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தின் போது கள்ளர் பள்ளியை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க கூடாது என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், கள்ளர் பள்ளி மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் வேணி நன்றி கூறினார்.
சதீஷ், இணை ஆசிரியர்
Comments