சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகம் உள்பட அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் களப்பணிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடிநாயக்கனூர்,சின்னமனூர், கம்பம் கூடலூர் ஆகிய 6 நகராட்சி பகுதிகளில் இருந்து துப்பரவு பணியாளர்கள் தேனி –அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துப்புரவு களப்பணிகள் மேற்கொள்ள சுகாதார பணிக்கான உபகரணங்களுடன் புறப்பட்டு சென்றனர். இந்த சுகாதார பணிக்கு சென்ற துப்புரவு பணியாளர்களை தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி ஹெல்த் அலுவலர் டாக்டர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசந்திரன், பாலமுருகன், சரவணன், சுல்தான் மற்றும் தனியார் துப்புரவு பணியாளர்கள் நிறுவன மேலாளர் உமர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments