இந்து எழுச்சி முன்னணி சார்பில் வாரந்தோறும் கோயில் செல்வோம்" "உழவாரப்பணி செய்வோம்"என்ற தலைப்பில் 8.10.2023 அன்று இரண்டாவது வாரமாக தேனி கம்பம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காட்டுபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது. இந்த தூய்மை பணி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்ரேசர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இந்த பணியில் நகர பொருளாளர் நாகர்கோவில் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் சிவராம், தேனி நகர செயலாளர்கள் அரண்மனை முத்துராஜ், தினேஷ், துணைத்தலைவர் சிவா, தேனி நகர துணைச்செயலாளர்கள் கனகு பாண்டி, நகர செயற்குழுஉறுப்பினர் கருப்பசாமி, மணிகண்டன் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த உழவார பணிகளை இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். இரவி, மாவட்ட தலைவர் இராமராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments