தேனி மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டியினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, 7.10.2023 அன்று தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து துவங்கி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.
25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து துவங்கி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர். 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவகத்தில் துவங்கி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/- (ஐந்தாயிரம் மட்டும்) இரண்டாம் பரிசாக ரூ.3,000/-(மூன்றாயிரம் மட்டும்) மூன்றாம் பரிசாக ரூ.2,000/-(இரண்டாயிரம் மட்டும்) மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10-ஆம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.1000/-(ஆயிரம் மட்டும்) ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன் உதவி ஆசிரியர்
Comments