Skip to main content

தேனியில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்                திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 6.10.2023 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருநங்கைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட்டார்கள் .

அதன்படி திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் வீட்டு மனை வேண்டியும்,  கல்வி கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என  பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். அப்போது கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட சமூக நலன் அலுவலர் சியாமளா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments