தேனியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி : மாணவர் பிரிவில் தஞ்சாவூர் பள்ளியும், மாணவியர் பிரிவில் சேலம் பள்ளியும் முதல் இடம் பிடித்தது
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி 7.7.2023 முதல் 9.7.2023 வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கான இறுதிப்போட்டி 9.7.2023 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மாணவர் அணி பிரிவில் தஞ்சாவூர் கமலா சுப்பிரமணி மேல்நிலைப்பள்ளியும், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி அணிகளும் விளையாடின. இதில் தஞ்சாவூர் கமலா சுப்பிரமணி மேல்நிலைப்பள்ளி அணி 52-48 என்ற புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது.
தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி அணியும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி அணிகளும் விளையாடின. இதில் 79-56 புள்ளிகளை பெற்று தூத்துக்குடி கிராண்ட் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும், திண்டுக்கல் MSP சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி அணி நான்காம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது.
இதேபோன்று மாணவியர்கள் அணி பிரிவில் சேலம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளிகளும் வீளையாடின. இதில் சேலம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி: 34-14 என்ற புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் அணி இரண்டாமிடத்தையும் பெற்றது. அதுபோல பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வீ.வி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணிகளும், சென்னை லேடிஸ் சிவசாமி மேல்நிலைப்பள்ளி அணிகளும் விளையாடின இதில் பட்டிவீரன்பட்டி மேல்நிலைப்பள்ளி 46-29 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தையும் சென்னை லேடிஸ் சிவசாமி மேல்நிலைப்பள்ளி அணி நான்காமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. மாநில அளவிலான மாணவ, மாணவியர் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற அணியினருக்கு மதுரை, தமிழ்நாடு உணவு தானிய வியாபாரிகள் அசோசியேசன் தலைவர் S.V.S.S வேல்சங்கர் அவர்கள் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். மேலும் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்ற அணியினருக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் Tராஜமோகன் அவர்களும், மூன்றாமிடம், நான்காமிடத்தில் வெற்றி பெற்ற அணியினருக்கு உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல். பொருளாளர் M.பழனியப்பன், உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் B.ராமச்சந்திரன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தனர்.
G.சிவக்குமார் நிர்வாக ஆசிரியர்
K.சரவணன், சிறப்பு நிருபர்
Comments