தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் கிராமத்தில் இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மக்கள் தொடர்பகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும், உலக மக்கள் தொகை தினம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு முகாம் 25.7.2023 அன்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நவநீதன் தலைமை தாங்கினார். முகாமிற்கு வந்த அனைவரையும் மதுரை கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். இந்த முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள், வேளாண்மை சார்ந்த திட்டங்கள், விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தால் வழங்கப்படும் இலவச பயிற்சிகள் என பல்வேறு அரசு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிருக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை குறித்த குறு பிரசுரத்தை வெளியிட்டார். முன்னதாக ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். முகாமின் போது தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் மதுரை அலுவலக கல்வி அதிகாரி கிரிஜா சிவகாமி பேசுகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் ந- ளாசயஅ இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். அதுபோல வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி பேசும் போது சிறுதானிய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உழவு மானியமாக ஹெக்டருக்கு ரூ.2,000 வழங்கப்பட உள்ளதாக பேசினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பை வழங்கப்பட்டது. முகாமில் தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
S R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
R.ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments