Skip to main content

ரத்தினம் நகரில் சாக்கடை பாலத்தை சரிசெய்யா விட்டால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம்: இந்து எழுச்சி முன்னணி அறிவிப்பு

தேனி மாவட்டம், தேனி யூனியன், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள ரத்தினம் நகர் 8-வது தெரு பொறியாளர் ஸ்ரீதர் அவர்கள் வீட்டின் முன்பு மிக மோசமான நிலையில் சாக்கடை இருக்கிறது. அவருக்கு 3 வயதில் குழந்தை உள்ளது என்றும், தனது பக்கத்து வீட்டில் 6 மாத குழந்தை உள்ளதும் என்றும் கூறுகிறார். இந்நிலையில் தனது வீட்டின் முன்பு நன்றாக இருந்த பாலத்தை உடைத்து நாங்கள் சீரமைத்து தருகிறோம் என்று சொல்லி உடைத்து இப்போது 17 நாட்கள் ஆகின்றது. இதுவரை வேலை  ஆரம்பிக்கவே இல்லை அதில் இருந்து கொசுக்கள் வருகின்றது. குறிப்பாக மழை நேரத்தில் தண்ணீர் பாம்பு வருகிறது. குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்படுவதாக தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணிக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து வீட்டின் உள்ளே வருகிறது. வீட்டின் முன்பு சாக்கடை தேங்கி நிற்கிறது . இதனால் மிகவும் மன உளைச்சலான சூழ்நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். மழைக்காலங்களில் ரத்தினம் நகர் முழுவதும் மிக மோசமான நிலையில் உள்ளது. வண்டி, வாகனங்கள் செல்வதற்கு நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது . அதுபோல ரத்தினம் நகர் 8-வது தெருவின் பாலத்தின் முன்பு வயதான அம்மா வழுக்கி கீழே விழுந்து விட்டார். இன்னொரு நபருக்கு கால் வழுக்கி இழுத்து பலத்த காயம் ஏற்பட்டு விட்டது . 

இப்பகுதியில் பொதுமக்கள் நடப்பதற்கே மிகவும் அவதிபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட வார்டு கவுன்சிலரும்,  ஊராட்சி தலைவரும் சரி செய்ய முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி பெரியகுளம் ஒன்றியத்தின் சார்பாக அப்பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம் என்று இந்து எழுச்சி முன்னணி பெரியகுளம் ஒன்றிய தலைவர் காமாட்சி தெரிவித்துள்ளார். Cell.7092627041.


K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்

Comments