லோயர்கேம்ப் பகுதியில் தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் கண்ணகி கோட்டம் அமைக்கப்படும்: நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தகவல்
தேனி முல்லை பெரியாறு முத்தமிழ் மன்றம், மிஸ்ரா இலக்கிய பேரவை சார்பில் மங்கலதேவி கண்ணகி சித்ரா பௌர்ணமி விழா தேனியில் நடைபெற்றது. விழாவிற்கு ஜே.ஆர்.ஆர் சிவில் டெக் குரூப்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உப்புக்கோட்டை பச்சையப்பன் கல்வி குழுமம் தலைவர் லட்சுமிவாசன் முன்னிலை வகித்தார். விழாவை டைமண்ட் குரூப்ஸ் சேர்மன் பாண்டிசெல்வம் தொடங்கி வைத்தார்.
விழாவில் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்ணகி திருவுருவபடத்தை திறந்து வைத்து, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேராசிரியர் பத்மினி பாலா, தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் பாலமுருகன், தேசிய செட்டியார்கள் பேரவை மாநில செயலாளர் சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை தேசிய செட்டியார்கள் பேரவை தேனி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தொகுத்து வழங்கினார்.
விழா முடிவில் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தமிழக-கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு தமிழகம் மற்றும் இந்திய அளவில் இருந்து வரக்கூடிய மக்களை வரவேற்க தேனி மாவட்ட மக்கள் தயாராக உள்ளனர். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவிற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விஷயங்களை கோவிலுக்கு செய்திருக்கிறது. தமிழக- கேரளா எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது முல்லை பெரியாறுக்கும் இருக்கிறது. அதுபோல கண்ணகி கோவிலுக்கும் உள்ளது. கண்ணகி கோவிலுக்கு செல்ல தமிழக பகுதி வழியாக சென்று வர வழிவகை செய்ய வேண்டும். இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவிலுக்கு தமிழகம் வழியாக செல்லும் போது சில குறிப்பிட்ட தூரம் கேரளா வழியாக சென்று வர வேண்டியிருந்தால் கண்ணகி கோவிலுக்கு நம்மால் தமிழ்நாடு வழியாக சென்று வழிபட முடியவில்லை. அதனால் மத்திய அரசு உடனடியாக தலையீடு செய்து நமக்கான உரிமையை பெற்று கொடுப்பதுடன், தமிழ்நாடு வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்று வர வழிவகை செய்ய வேண்டும்.
அதுபோல தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் லோயர்கேம்ப் பகுதியில கண்ணகி கோட்டம் வருங்காலங்களில் அமைக்கப்படும். இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா கூறினார்.
K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்
Comments