Skip to main content

வீரபாண்டியில் ஆற்று படித்துறையில் உள்ள துணிகளை அகற்ற வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் கோரிக்கை மனு


தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் தேனி நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ் தலைமையில் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், வருகின்ற 9.5.2023 -ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தற்போது இருந்தே  தங்களது நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வீரபாண்டி ஆற்றின் பாலத்தின் மேற்குப்புறமும், கிழக்குப்புறமும் உள்ள படித்துறையில் பக்தர்கள் விட்டு செல்லும் பழைய துணிகள் மிக அதிகமாக சேர்ந்து அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. 

இதனால் ஆற்றில் குளிக்க வரும் பக்தர்களுக்கு மிகவும் அசௌகரியமான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே படித்துறைகளை சுத்தம் செய்தும், இந்த படித்துறையில் மின் விளக்கு  இல்லாததால்  பக்தர்கள் நீராடுவதற்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாலும் படித்துறைகளில் மின்விளக்கு வசதியும் செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர செயலாளர் தினேஷ் துணை செயலாளர் விஷ்ணு, உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கோம்பை இளம்பருதி ஆகியோர் உடன் இருந்தனர்.

K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்

Comments