Skip to main content

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 17-ந் தேதி தொடங்குகிறது: கலெக்டர் தகவல்


தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, உத்தமபாளையம்;, பெரியகுளம் மற்றும்  தேனி ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் 17.5.2023 முதல் 26.5.2023 வரை (19.5.2023 மற்றும் 22.5.2023) ஆகிய நாட்கள் நீங்கலாக வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.  இதில் போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி  கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை கிராமங்களுக்கு 23.5.2023 அன்றும், கொட்டக்குடி, போடி-வடக்குமலை, அகமலை கிராமங்களுக்கு 24.5.2023 அன்றும் வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இதேபோன்று ஆண்டிபட்டி தாலுகாவில் கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1, 2 கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், புலிமான் கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட்-1, 2 கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி கிராமங்களுக்கு 23.5.2023 அன்றும், கோத்தலூத்து, கொத்தப்பட்டி, இராஜதானி, பழையகோட்டை, இராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி கிராமங்களுக்கு 24.5.2023 அன்றும், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை கிராமங்களுக்கு 25.5.2023 அன்றும் வருவாய் தீர்வாயம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

உத்தமபாளையம் தாலுக்காவில் பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம் கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு, வடக்கு), கீழக்கூடலூர் (மேற்கு,  கிழக்கு) கிராமங்களுக்கு 23.5.2023 அன்றும், அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி (தெற்கு, வடக்கு), நாராயணதேவன்பட்டி மலை, காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை கிராமங்களுக்கு 24.5.2023 அன்றும், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் (மலை) கிராமங்களுக்கு 25.5.2023 அன்றும், கோம்பை (கிழக்கு, மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம் (தெற்கு, வடக்கு), கோகிலாபுரம், இராயப்பன்பட்டி கிரமங்களுக்கு 26.5.2023 அன்றும் உத்தமபாளையம்  வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.  

அதுபோல பெரியகுளம் தாலுகாவில் கெங்குவார்பட்டி பிட்-1, 2, தேவதானப்பட்டி பிட்-1, 2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், ஜெயமங்கலம் பிட்-1, 2, குள்ளப்புரம், மேல்மங்கலம் பிட்-1, 2 கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், கீழ வடகரை, வடகரை பிட்-1, 2, தென்கரை பிட்-1, 2 கிராமங்களுக்கு 23.5.2023 அன்றும், ஏ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம் பிட்-1, 2, வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கு 24.5.2023 அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

 தேனி தாலுகாவில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் கிராமங்களுக்கு 23.5.2023 அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

மேற்கண்ட வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான அனைத்து குறைகளையும், மனுக்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு  தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

R.பாண்டியன், உதவி ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்

Comments