கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி இந்து எழுச்சி முன்னணியினர் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியும், வடுகபட்டி போயர் சமுதாய ஸ்ரீ பாட்டையா கோவில் பங்காளிகளும் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் விஷ்வா பாலமுருகன், தேனி நகர தலைவர் செல்வபாண்டி, நகர துணைத்தலைவர்கள் சிவா, நாகராஜ், நகர அமைப்பாளர் சிவராமன், நகர துணை செயலாளர்கள் விஷ்ணு, சீனிவாசன், ரெங்கராஜ், ராஜா, நாகேஷ், நகர செயலாளர் தினேஷ்குமார், உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் இளம்பரிதி, பெரியகுளம் ஒன்றிய தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் குமரேசன் மற்றும் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்களும், வடுகபட்டி ஸ்ரீ பாட்டையா கோவில் பங்காளிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீ பாட்டையா கோவில் தலைவர் திருமுருகன் அவர்கள் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், பெரியகுளம் வடுகபட்டி ஸ்ரீ பாட்டையா கோவில் தலைவராக உள்ளேன். இந்த கோயில் ஆனது வடுகபட்டி பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட வார்டு எண் 6-ல் நாயக்கர் தெருவில் 300 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு செல்லும் முக்கிய பாதையை ஒரு தரப்பினர் பாதையை மறித்து கட்டிடம் கட்டி வந்தார்கள்.
இது சம்பந்தமாக வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் அவர்கள் தலையீடு செய்து ஆக்கிரப்பை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனைத்அடுத்து வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் கோவில் பங்காளிகள் ஆகியோர் மனு கொடுத்து ஸ்ரீ பாட்டையா கோயில் ஆக்கிரமிப்பு பாதையை பார்வையிட்டனர்.
R.பாண்டியன், உதவி ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்
Comments