Skip to main content

போடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு


தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டி, அணைக்கரைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை 2.5.2023 அன்று மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது. போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, சிறுபாலம், வடிகால் அமைக்கும் பணி, வலையபட்டி கிராமத்தில் இருந்து வரும் கழிவு நீரினை வடிகால் மூலம் கிடைமட்ட உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டு வரும் இடம்.மற்றும் 

மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை முறையாக பராமரித்திட துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி. நபார்டு வங்கியின் மூலம் போடி-வலசதுரை சாலை முதல் அத்தியூத்து இடையயேயான உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, உதவி பொறியாளர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

ரா.சிவபாலன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்

Comments