Skip to main content

நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு முதல் காரணம் மக்கள் தான்: நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி., பேச்சு


தூத்துக்குடி மாவட்டம், (எட்டயபுரம் சாலை) சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற நெய்தல் கலை விழாவின் நிறைவு நாளில் தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்,

நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற முதல் காரணம் தூத்துக்குடி மக்கள் தான். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த கலைஞர்கள் மற்றும் உணவுக்கடை மக்களுக்கும் நன்றிகள். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஒருங்கிணைந்த மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும்,  காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி என்று பேசினார்.

நெய்தல் கலை விழா ஏப்ரல் 28-ந் தேதி தொடங்கி மே 1-ம் தேதி வரை 4 நாட்கள் நடந்தது. இந்த நெய்தல் கலை விழாவில் 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தது மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை காண வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். மேலும் கலை திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.. இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இந்த கலை திருவிழாவில் மிகவும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய உணவுகளும் மிகவும் தங்களை கவர்ந்ததாக இளைய தலைமுறையினர் தெரிவித்தனர்.

இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்


Comments