தேனி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் 1.5.2023 அன்று மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கி.சிந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் தலைமையில், துணைத்தலைவர் பிரியா, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது .
இதேபோன்று தாடிச்சேரி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுபஸ்ரீ தயாளன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது. தர்மாபுரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. இதேபோன்று கோட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் கிராம மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த கிராம சபை கூட்டங்களில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்கள். அதுபோல இந்த கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
S.சசிதுரை, சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்
Comments