Skip to main content

கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணி நிறைவு பாராட்டு விழாவில் கவிபேரரசு வைரமுத்து, கலெக்டர்கள் பங்கேற்பு

தேனி மாவட்டம். கெங்குவார்பட்டி பேரூராட்சிக்குட்பட்பட்ட எஸ்.கே.எம் மஹாலில், டிடி 124 கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வந்த செயலாளரும். விருதுநகர் மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன் அவர்களின் தந்தையுமான வீ.பழனிச்சாமி அவர்களின் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா 1.5.2023 அன்று திரைப்பட பாடலாசிரியர் கவிபேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.விசாகன். அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கவிபேரரசு வைரமுத்து அவர்கள் பேசும் போது,

கெங்குவார்பட்டிக்கு இது முத்திரை திருவிழாவாக. இவ்விழா அமைந்துள்ளது. இந்த மண்ணின் மைந்தனான தந்தைக்கு அவரது மகன் விழா எடுக்கிறார். தந்தை யாரென்றால் ஒரு கடன் சங்கத்தில் வேலை பார்த்து, தன் மகனை மாவட்ட கலெக்டர் ஆக்கியது, இம்மண்ணிற்கு பெருமை.

இளங்கோவடிகள் சொல்கிறார் கண்ணணிக்கு பெருமை கோவலன் மனைவி என்பதனாலா,. கற்புக்கரசி என்பதனாலா, பூம்புகாரின் புத்திரி என்பதனாலா, கற்புக்கரசி பெண்களால் புகழப்பட்டவள் கண்ணகி. ஒரு பெண்னுக்கு பெருமை ஆண்கள் கூடி பாராட்டுவதை விட பெண்கள் கூடி ஒரு பெண்ணை பாராட்டுவதுதான் பெருமை. அதனைப்போன்று ஒரு தகப்பனுக்கு எது பெருமை என்றால் அரசாங்கம் மற்றும் மற்றவர்கள் பாராட்டுவதை மகன் பாராட்டுவது தான் மிகப்பெரிய பெருமை.

பழனிச்சாமி அவர்கள் தான் கஷ்டப்பட்டு தனது பிள்ளைகளை இந்த சமூகத்தில் மிகப்பெரிய ஆளாக்கி இருக்கிறார்கள். மேலும், தனது குடும்பம் மட்டும்மல்லாமல் பிறக்கு அவரால் முடிந்த வரை உதவியையும் செய்து தந்து இருக்கிறார்கள். இந்த உதவி செய்யும் பணி எல்லோரிடத்திலும் எளிதில் அமைந்து விடாது. பணி ஓய்வு பெற்ற பிறகும், பிறக்கு உதவி செய்யும் பணி தொடர வேண்டும் என பழனிசாசமி அவர்களை வாழ்த்தி விடை பெறுகிறேன் என பேசினார்.

இந்த விழாவில், அரசு அலுவலர்கள், கூட்டுறவுச்சங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.


G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்

Comments