Skip to main content

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு அடிப்படை வசதிகள் தேவை : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி 23.4.2023 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ் வழிகாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது வருகின்ற மே மாதம் இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டமான வருடாந்திர பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவது என்றும், தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி, பெண்களுக்கு துணி மாற்றும் அறை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை வீரபாண்டி பேரூராட்சி  நிர்வாகம் சிறப்பாக செய்து தர வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது என்பன உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Comments