தேனி மாவட்டம், குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் கோவில் சுரபி நதி சுத்தம் செய்யும் பணி: இந்து எழுச்சி முன்னணியினர் முயற்சி
தேனி மாவட்டம் குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் சுரபி நதியில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக இந்து எழுச்சி முன்னணிக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர செயலாளர் தினேஷ்குமார், நகர துணை செயலாளர் ரெங்கராஜ், பெரியகுளம் நகரத் தலைவர் பட்டர் கோகுல் ஆகியோர்கள் புறப்பட்டு சென்று கோவில் வளாகத்தை சுற்றி பார்த்து சுரபி நதியை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி சுரபி நதியில் இறங்கி சாக்கடை நீர் கலந்து வருகிறதா? கலங்கிய நீரில் துர்நாற்றம் வீசுகிறதா? என்று சோதனை செய்ய நதியில் இறங்கி பார்த்தார்.
G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்
Comments