Skip to main content

தேனி மாவட்டம், குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் கோவில் சுரபி நதி சுத்தம் செய்யும் பணி: இந்து எழுச்சி முன்னணியினர் முயற்சி


தேனி மாவட்டம் குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் சுரபி நதியில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக இந்து எழுச்சி முன்னணிக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர செயலாளர் தினேஷ்குமார், நகர துணை செயலாளர்  ரெங்கராஜ், பெரியகுளம் நகரத் தலைவர் பட்டர் கோகுல் ஆகியோர்கள் புறப்பட்டு சென்று கோவில் வளாகத்தை சுற்றி பார்த்து சுரபி நதியை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட செயலாளர்  இராமமூர்த்தி சுரபி நதியில் இறங்கி சாக்கடை நீர் கலந்து வருகிறதா? கலங்கிய நீரில் துர்நாற்றம் வீசுகிறதா? என்று சோதனை செய்ய நதியில் இறங்கி பார்த்தார்.

 நதியில் சாக்கடை நீர் கலக்கவில்லை மாறாக தேங்கி இருக்கும் நீர் மற்றும் துணிகள் அகற்றப்படாமல் இருக்கும் காரணத்தினால்தான் துர்நாற்றம் வீசுகிறது என்ற செய்தியை கூறினார். பொறுப்பாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே சாமி தரிசனம் செய்ய வந்த தொழில் அதிபர் சரவணகுமார்  அவர்கள் எங்களிடம் விஷயங்களை கேட்டறிந்து குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு இன்று இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் தேனியில் இருந்து வருகை தந்திருக்கிறார்கள். சுரபி நதியை நீங்கள் சரி செய்யாவிட்டால் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்ய இருப்பதாக பேசி கொள்கிறார்கள் என்ற தகவலை சொன்னார். இந்த தகவலை கேட்ட செயல் அலுவலர் அவர்கள் துப்புரவு பணியாளர்களை உடனே அனுப்பி வைத்து சுரபி நதியை சுத்தம் செய்ய உத்தரவு பிறப்பித்தார். பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தொழில் அதிபர் சரவணகுமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும்,  வாழ்த்துக்களையும் தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக தெரிவித்துள்ளனர்.

G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்

Comments