Skip to main content

தேனியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் - சிறப்பு தொழுகை

 தேனி மாவட்டத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேனி பழைய பஸ் நிலையம் அருகே கம்பம் சாலையில்  உள்ள அல்லிநகரம் தேனி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மற்றும் மல்கர் பாவா தர்காவில் தலைவர் மல்கர் ஒலி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜாகிர் உசேன், செயலாளர் ஜியாவுதீன், இணைச்செயலாளர் அப்துல் ஹக்கீம், துணைச்செயலாளர் முகமது அனிபா, பொருளாளர் ரபீக் ராஜா மற்றும் நிர்வாகிகள் உள்பட இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். முன்னதாக அல்லிநகரத்தில் இருந்து தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக சென்றனர். இதேபோன்று தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சுப்பன் தெரு புதுப்பள்ளி வாசலில் ஜமாத் தலைவர் சர்புதீன் தலைமையில் ஏராளமானோர் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் இருந்து புது பள்ளிவாசல் வரை ஊர்வலமாக சென்றனர்.



Comments