Skip to main content

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (27.04.2023) மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி, பணிதளத்தில் குடிநீர் வசதி மற்றும் முதலுதவி பெட்டி வசதிகள், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.9.85 அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டுமானப்பணி, அறிஞர் அண்ணா துவக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கன்வாடி மையத்தின் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஓடை பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை வருவாய்த்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு. ஓடை பகுதிகளை ஊராட்சி கட்டுப்பாட்டில் வைத்திட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், ஊராட்சி பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் நேரடியாக மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

முன்னதாக, ஜ.கல்லூப்பட்டியில் செயல்பட்டு வரும் அன்பு குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை, பணியாளர்களின் எண்ணிக்கை குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு வழங்கப்படும் உணவு, குடிநீர், சுகாதாதர வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இல்லத்தின் செயல்பாடுகள் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளின்படி செயல்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ. மாணவியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை. வருகைப்பதிவேடு, வழங்கப்படும் உணவு, அதன் தரம் மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.


இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஈ.சந்தியா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் பி.மகேஸ்வரி, துணைத்தலைவர் சி.எம்.ஆண்டிச்சாமி, செயலாளர் எஸ்.கணபதி உட்பட சம்பந்தப்பட்ட துறையினர். உடனிருந்தனர்.
.

ரா.சிவபாலன், சிறப்பு நிருபர்-சுக்ரன் நியூஸ்



Comments