தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (27.04.2023) மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, ஜ.கல்லூப்பட்டியில் செயல்பட்டு வரும் அன்பு குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை, பணியாளர்களின் எண்ணிக்கை குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு வழங்கப்படும் உணவு, குடிநீர், சுகாதாதர வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இல்லத்தின் செயல்பாடுகள் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளின்படி செயல்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ. மாணவியர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை. வருகைப்பதிவேடு, வழங்கப்படும் உணவு, அதன் தரம் மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
.ரா.சிவபாலன், சிறப்பு நிருபர்-சுக்ரன் நியூஸ்
Comments