தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் 19.4.2025 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மபூஷன், கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு தலைமை உரையாற்றி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, சால்வை அணிவித்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியின் போது கவிப்போரரசுவுக்கு வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் ஆளுயுர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. இதில் வெற்றித் தமிழர் பேரவை மூத்த நிர்வாகிகள் டாக்டர் செல்வராஜ், வழக்கறிஞர் மணி கார்த்திக், வடுகபட்டி அழகர், கம்பம் ரவி உள்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் சசிதுரைக்கு கவிப்பேரரசு சால்வை அணிவித்தார். அப்போது உமா நாராயணன் பதிப்பகம் சுபாஷ் சந்திரபோஸ், தொழில் நுட்பப்பிரிவு துணை தலைவர் வீரபாண்டிய பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே நிகழ்ச்சியின் போது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர், சமூக ஆர்வலர் நாணயம் சிதம்பரம் புத்தகம் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.
.................................
Comments