Skip to main content

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.16-

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு 16.4.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் சன்னாசி, காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் போடி நகர தலைவர் முசாக் மந்திரி, கூடலூர் நகர தலைவர் ஜெயப்பிரகாஷ், கம்பம் நகர தலைவர் போஸ், வட்டார தலைவர்கள் தேனி முருகன், பெரியகுளம் ஹம்சா முகமது, ஆண்டிபட்டி ரவீந்திரன், கடமலை மயிலை தங்கம், உத்தமபாளையம் சத்தியமூர்த்தி, கம்பம் அன்பரசன், சின்னமனூர் ஜீவா, போடி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர் சதாசிவம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர் சின்னபாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் இனியவன், முன்னாள் நகர் மன்ற தலைவர் பழனிச்சாமி உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது சோனியா காந்தி எம்.பி., மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி., ஆகியோர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை (ஈடி) மூலம் பொய்யான வழக்கு ஜோடித்து, பொய்யான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நோக்கத்தோடு செயல்படும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.

................................

நாகராஜ், தலைமை நிருபர் 





Comments