Skip to main content

தேனி நகராட்சி பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சி கூட்டம்

தேனி, ஏப்.12-

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சியினர் கூட்டம் 11.4.2025 அன்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா தலைமை தாங்கினார். 
நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் சலீம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம் உள்பட வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின் படி வருகின்ற ஏப்ரல் 21-ம்  தேதிக்குள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை தாங்களாக முன்வந்து அகற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் கோர்ட்டு உத்தரவினை பின்பற்ற கட்சிகளின் தலைமையில் இருந்து உத்தரவு வந்தவுடன் குறிப்பிட்ட தேதிக்குள் கொடி கம்பங்களை தாங்களாகவே அகற்றி கொள்வதாகவும் சில கட்சியினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
...................................
நாகராஜ், தலைமை நிருபர் 




Comments