Skip to main content

தெருநாய்கள் துரத்தி கடித்து ஒரே நாளில் 15 பேர் காயம் : பொதுமக்கள் உயிருக்கு ஏற்படும் அபாயம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? இந்து எழுச்சி முன்னணி எதிர்பார்ப்பு

தேனி, ஏப்.10-

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டில் மச்சால் தெரு, கிணற்றுத்தெரு, தொத்தமன் தெரு, மட்டன் ஸ்டால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெருநாய்களால் கடிக்கப்பட்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
ஈஸ்வரன் (வயது 64), மச்சால் தெரு, விஜயதர்ஷினி (22), தொத்தமன் தெரு, பூபதி ஒண்டிவீரன் நகர், வரதராஜ், பகவதி அம்மன் கோவில் தெரு, ஸ்ரீதர் முத்துபாலி தெரு,
செல்லப்பாண்டி, பகவதி அம்மன் கோவில் தெரு, அய்யப்பன், இளங்கோ தெரு, கீர்த்திகுமார் இளங்கோ தெரு, மேலும் 7 பேர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சாதாரணமான விஷயம்போல தெரியவில்லை. ஒரு மாவட்டத்தின் அடிப்படை பொது சுகாதாரம் மற்றும் மக்கள் பாதுகாப்பு முற்றிலும் தோல்வியடைந்ததற்கான உயிருடன் பேசும் சாட்சியாகும்..
மக்கள் உயிருடன் வாழும் உரிமையை பாதுகாப்பது மாவட்ட, நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். ஒரே நாளில் 15 பேரை கடிக்கும் அளவுக்கு தெருநாய்களை கட்டுப்படுத்த நிர்வாகம் இழந்து விட்ட நிலையில் இந்த நகராட்சி உள்ளது என்று கூற வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

எனவே இனி ஒருவர் கூட பாதிக்கப்படாமல் இருக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதுபோல மனித உயிர்கள் மீது இரக்கம் வேண்டும். செயலில் அக்கறை பிரதிபலிக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் ரமேஷ் மற்றும் இந்து எழுச்சி முன்னணியினர் வலியுறுத்தி எதிர்பார்த்து வருகின்றனர்.
........................


Comments