தேனி, ஏப்.28- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ம. மருதுபாண்டி பிரபாகரன் சிறப்பு தமிழில் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் வே.சேகரன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி கிராம ஊராட்சி ஆணையாளர் எஸ். சரவணன் மற்றும் நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆண்டிபட்டி அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஜெ.சரவணன் சிறப்புரை ஆற்றினார். தேனி மைய பயிற்சி அலுவலர் மா- அன்பரசன் உடையாளி, லட்சுமணன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 4 நாட்கள் நடைபெறும் முகாமில் பள்ளி துப்புரவுப் பணி, கோயில் துப்புரவுப் பணி தெருக்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும் என்றும் மேலும் பொதுமக்களுக்கான மஞ்சள் பை வங்கி மேலாண்மை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக என்.எஸ்.எஸ். அலுவலர் மருதுபா...
Publisher of the Website : Nagaraj Kamudurai