Skip to main content

Posts

Showing posts from April, 2025

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்டம்

தேனி, ஏப்.28- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.  முகாமின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ம. மருதுபாண்டி பிரபாகரன் சிறப்பு தமிழில் வரவேற்றார்.  நிகழ்ச்சிக்கு தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் வே.சேகரன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி கிராம ஊராட்சி ஆணையாளர் எஸ். சரவணன் மற்றும் நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆண்டிபட்டி அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஜெ.சரவணன் சிறப்புரை ஆற்றினார். தேனி மைய பயிற்சி அலுவலர் மா- அன்பரசன் உடையாளி, லட்சுமணன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 4 நாட்கள் நடைபெறும் முகாமில் பள்ளி துப்புரவுப் பணி, கோயில் துப்புரவுப் பணி தெருக்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும் என்றும் மேலும் பொதுமக்களுக்கான மஞ்சள் பை வங்கி மேலாண்மை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக என்.எஸ்.எஸ். அலுவலர் மருதுபா...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

  தேனி, ஏப்.28- தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு லோக் ஜனசக்தி கட்சி களப்போராளி அய்யணன், இந்து திராவிட மக்கள் கட்சி மதுரை மண்டல தலைவர் அபினேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தமபாளையம், கோம்பை, போடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குடியிருப்போர் மற்றும் வீடு இல்லாதோருக்காக கலைஞர் ஆட்சி காலத்தில் அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தற்பொழுது ஆக்கிரமிப்புகார்கள் பிடியில் சிக்கி உள்ளது. அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகார்கள் பிடியில் உள்ள அரசால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் கலைஞரால் வழங்கப்பட்ட இலவச காலிமனை பட்டாக்களை தங்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை காலியிடம் பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ஏற்கெனவே கடந்த 17.2.2025 அன்று மனு கொடுத்திருந்தோம் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் வசிக்கும் ஏழை எளி...

தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனி, ஏப்.25- தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தேனி ஸ்ரீ தெய்வா ஹோட்டலில் 24.4.2025 அன்று நடைபெற்றது. விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவராக பொறியாளர் மெல்வின் பதவி ஏற்றார். அதுபோல செயலாளராக சையது பரூக்  அப்துல்லா, பொருளாளராக  ரவி பாரத் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.  முன்னாள் மண்டல தலைவர் பொறியாளர் ரமேஷ்பாபு மற்றும் நந்தகுமார்  ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.  பேசியட்  முன்னாள் மாநில செயலாளர் குழந்தைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சங்க உறுப்பினர்கள் கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் மோகன்ராம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  விழாவின் போது சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு:-  கட்டுமான பொருட்களின் விலை வாசிகளை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். அத்தியாவசியமான கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, ஜல்லி, எம்சன் போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்...

குச்சனூர் அருகே மாநில அளவிலான கபடி போட்டி : 52 அணிகள் பங்கேற்றன

  தேனி, ஏப்.24 தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கு.துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள  அருள்மிகு அங்காளஈஸ்வரி அம்மன், கொத்தாள முத்தையா, ராமபுலி அய்யனார் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு DSP ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி MMS மைதானத்தில் 22.4.2025 மற்றும் 23.4.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.  இந்த போட்டியில் சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதி கபடி போட்டியினை சின்னமனூர் ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி,  தொழிலதிபர் M.C.போஸ் வீரர்களுக்கு கை குலுக்கி துவக்கி வைத்தார். மேலும் கபடி போட்டி நடுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 4-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பைய...

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இந்து எழுச்சி முன்னணியினர் புஷ்பாஞ்சலி😭

தேனி, ஏப்.23- ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் 22.4.2025 அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்ட அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தார்கள். இந்த கோரமான, மனிதாபிமான விரோத செயல், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உயிரிழந்த மக்களின் ஆன்மாக்கள் இறைவன் திருவடி நீழலில் சாந்தியடைய, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில், வீரமரணமடைந்தவர்களின் படங்களை வைத்து, தீபம் ஏற்றி, மலர் தூவி, புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வ பாண்டியன் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதுபோன்று இன்னும் ஒரு அப்பாவி உயிரும் இழக்காதிருக்க, இந்நாட்டில் அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகின்றது. .................

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வக்கீல்கள் சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.21- தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி மாவட்ட வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 21.4.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் மாரப்பன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் செல்வ மனோகரன், செல்வன், பாலமுருகன் பாண்டி மணி, ஹரிஹர சுதன், ராமகிருஷ்ணன் உள்பட வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள மதுரை சாலையை மறித்து வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லை! மக்களின் பாதுகாப்பு எங்கே! என்றும், வக்கீல் செல்வ மனோகரன் கொடுத்த புகாரில் எதிரிகளை கைது செய்ய வேண்டும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இர...

பெரியகுளத்தில், வெற்றித் தமிழர் பேரவை புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தேனி, ஏப்.20- தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் வெற்றித் தமிழர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் 19.4.2025 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மபூஷன், கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு தலைமை உரையாற்றி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, சால்வை அணிவித்து கவுரவித்தார்.  நிகழ்ச்சியின் போது கவிப்போரரசுவுக்கு வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் ஆளுயுர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. இதில் வெற்றித் தமிழர் பேரவை மூத்த நிர்வாகிகள் டாக்டர் செல்வராஜ், வழக்கறிஞர் மணி கார்த்திக், வடுகபட்டி அழகர், கம்பம் ரவி உள்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் சசிதுரைக்கு கவிப்பேரரசு சால்வை அணிவித்தார். அப்போது உமா நாராயணன் பதிப்பகம் சுபாஷ் சந்திரபோஸ், தொழில் நுட்பப்பிரிவு துணை தலைவர் வீரபாண்டிய பிரபு ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையே நிகழ்ச்சியின் போது  கவிப்பேரரசு வைரமுத்து  அவர்களுக்கு தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர், சமூக ஆர்வலர் நாணயம் சிதம்பரம் புத்தகம் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார். .................................

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.16- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு 16.4.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் சன்னாசி, காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் போடி நகர தலைவர் முசாக் மந்திரி, கூடலூர் நகர தலைவர் ஜெயப்பிரகாஷ், கம்பம் நகர தலைவர் போஸ், வட்டார தலைவர்கள் தேனி முருகன், பெரியகுளம் ஹம்சா முகமது, ஆண்டிபட்டி ரவீந்திரன், கடமலை மயிலை தங்கம், உத்தமபாளையம் சத்தியமூர்த்தி, கம்பம் அன்பரசன், சின்னமனூர் ஜீவா, போடி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர் சதாசிவம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர்  சின்னபாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் இனியவன், முன்னாள் நகர் மன்ற தலைவர் பழனிச்சாமி உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலில் சித்திரை திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தேனி, ஏப்.14- தேனி அல்லிநகரம் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்று காவடி திருவிழா என்று அழைக்கப்படும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 29-ம் தேதி மலைக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கிடையே திருவிழாவில் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் பங்குனி 1-ம் தேதி முதல் விரதம் இருந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்தில் காவடிகள் ஊர்வலத்துடன் நேற்று மாலை அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு தேனி நகர் வழியாக பங்களா மேடு பகுதியில் உள்ள சோலைமலை அய்யனார் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் மலர் அலங்காரத்தில் காவடிகளுடன் புறப்பட்டு செண்டா மேளம், தாரை தப்பட்டையுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சுற்றி பிற்பகலில் மலைக்கோ...

தேனி நகராட்சி பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சி கூட்டம்

தேனி, ஏப்.12- தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சியினர் கூட்டம் 11.4.2025 அன்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா தலைமை தாங்கினார்.  நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் சலீம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம் உள்பட வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின் படி வருகின்ற ஏப்ரல் 21-ம்  தேதிக்குள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை தாங்களாக முன்வந்து அகற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் கோர்ட்டு உத்தரவினை பின்பற்ற கட்சிகளின் தலைமையில் இருந்து உத்தரவு வந்தவுடன் குறிப்பிட்ட தேத...

தெருநாய்கள் துரத்தி கடித்து ஒரே நாளில் 15 பேர் காயம் : பொதுமக்கள் உயிருக்கு ஏற்படும் அபாயம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? இந்து எழுச்சி முன்னணி எதிர்பார்ப்பு

தேனி, ஏப்.10- தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டில் மச்சால் தெரு, கிணற்றுத்தெரு, தொத்தமன் தெரு, மட்டன் ஸ்டால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெருநாய்களால் கடிக்கப்பட்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்: ஈஸ்வரன் (வயது 64), மச்சால் தெரு,  விஜயதர்ஷினி (22), தொத்தமன் தெரு, பூபதி ஒண்டிவீரன் நகர்,  வரதராஜ், பகவதி அம்மன் கோவில் தெரு, ஸ்ரீதர் முத்துபாலி தெரு, செல்லப்பாண்டி, பகவதி அம்மன் கோவில் தெரு, அய்யப்பன், இளங்கோ தெரு, கீர்த்திகுமார் இளங்கோ தெரு, மேலும் 7 பேர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சாதாரணமான விஷயம்போல தெரியவில்லை. ஒரு மாவட்டத்தின் அடிப்படை பொது சுகாதாரம் மற்றும் மக்கள் பாதுகாப்பு முற்றிலும் தோல்வியடைந்ததற்கான உயிருடன் பேசும் சாட்சியாகும்.. மக்கள் உயிருடன் வாழும் உரிமையை பாதுகாப்பது மாவட்ட, நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். ஒரே நாளில் 15 பேரை கடிக்கும் அளவுக்கு தெருநாய்களை கட்டுப்படுத்த நிர்வாகம் இழந்து விட்ட நிலையில் இந்த நகராட்சி உள்ளது என்று கூற வேண்டிய சூழ்நிலை ...

தேனியில் ஆலோசனை கூட்டம்: தென்னையில் வேர் ஊட்டம் குறித்து தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

தேனி, ஏப்.10- தேனியில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 9.4.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கவிதாலயா சரவணன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பிரபு ராஜா, தேசிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் தென்னை சாகுபடியில் உள்ள இடர்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மதுமிதா, மதுஹரினி, மோகன ஸ்ரீ, மோனிஷ் பிரியா, நவீனா, நவினா மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் வேர் ஊட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...