தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை; தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறைந்து விடும்: தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
தேனி, மார்ச்.31- தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., 30.3.2025 அன்று தேனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலான பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதில் தமிழகத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை கூடும். ஆனால் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறையும். அதனால் தான் தி.மு.க வாதம் செய்து வருகிறது. இந்த மறுவரையறை விவகாரத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டியது தானே. ஏன் பேசவில்லை. ஜனநாயக முறைப்படி தான் நடக்கும் என கூறலாமே. தென் மாநில கூட்டு நடவடிக்கை குழுவில் தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் தற்போதைய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலே மறுவரையறை செய்யலாம். அன்றைய காலகட்டத்தில் வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் மக்கள் தொகை விகிதாச்சாரம் ஒரே அளவில் இருந்தது....