Skip to main content

Posts

Showing posts from March, 2025

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை; தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறைந்து விடும்: தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தேனி, மார்ச்.31- தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., 30.3.2025 அன்று தேனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலான பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதில் தமிழகத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை கூடும். ஆனால் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறையும். அதனால் தான் தி.மு.க வாதம் செய்து வருகிறது. இந்த மறுவரையறை விவகாரத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டியது தானே. ஏன் பேசவில்லை. ஜனநாயக முறைப்படி தான் நடக்கும் என கூறலாமே. தென் மாநில கூட்டு நடவடிக்கை குழுவில் தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் தற்போதைய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலே மறுவரையறை செய்யலாம். அன்றைய காலகட்டத்தில் வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் மக்கள் தொகை விகிதாச்சாரம் ஒரே அளவில் இருந்தது....

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தேனி, மார்ச்.30 - தேனி அருகே உள்ள நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 29.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி கல்லூரியின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மைசூர் யூனிட் டெக்னாலஜி இன்போசிஸ் -இணைத்தலைவர் பிரதீப் சிவகாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் எவ்வாறு இயங்குகின்றது என்றும், எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமே பயணிக்க கூடிய சமுதாய சூழல் உருவாகும் என்றும், UPI போன்ற நிதி சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி, மென்பொருள் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தி...

தேனி யூனியன், கோவிந்தநகரம் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம்

தேனி, மார்ச்.29- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் 29.3.2025 அன்று நடைபெற்றது. இவற்றில் தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி யூனியன் உதவி பொறியாளர் பிரகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கோவிந்தநகரம் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று தேனி யூனியன் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.  அரண்மனைபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி யூனியன் உதவி பொறியாளர் சுபா தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொ...

தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 15-வது கல்லூரி ஆண்டு விழா

தேனி, மார்ச்.29- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 -வது கல்லூரி ஆண்டு விழா 28.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை  உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம்  கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் மதுரை அண்ணா பல்கலைகழக மண்டலம் டீன் டாக்டர்.லிங்கதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கல்வி ஒன்று மட்டுமே சமுதாய வாழ்க்கை முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், தனிமனித ஒழுக்கம் மற்றும் ஆளுமை திறனை அளிக்கும் என்றும், மாணவர்கள் படிக்கும் பொழுதே தங்களுடைய அறிவை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியுமென்றும், அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு வழங்குகின்ற உதவித் தொகையினை சரியாக பயன்படுத்தி ...

ஆண்டிபட்டி அருகே மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மக்களுக்கு கோடையில் குல தெய்வமாய் விளங்கி வரும் தர்பூசணி பழம் விற்பனை

தேனி, மார்ச்.28- கொளுத்தும் கோடை வெய்யில் வந்தாலே .... மனிதனுக்கு தேவையான உடனடி நிவாரணம் என்றால்? அது மர நிழலும் குளிர்ந்த நீரும்  மற்றும் நீர்சத்து அடங்கிய பழ வகைகளும்  தானே...? தேனியிலிருந்து ஆண்டிபட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரே புளிய மர நிழல் என்றால் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திற்கும் எஸ்.எஸ்.புரம் பெரிய பாலத்திற்கும் இடையில் உள்ள ஒற்றை புளியமரம் மட்டுமே.... அங்கு மக்கள் நிழலுக்கு ஒதுங்குவதுடன் அந்த மரத்திற்கு அடியில் தான் இந்த தர்பூசணி அம்பாரம் போடப்பட்டுள்ளதால் நிழலுக்கு நிழலும் ஆச்சு தண்ணீர் பழத்துக்கு  தர்பூசணியும் ஆச்சு.... என்று ஒரே கல்வில் இரண்டு மாங்காய் அடித்து விடுகிறார்கள் . அப்படி இருக்கும் போது அந்த நிழல் தரும் புளியமரமும்  தர்பூசணியும் கோடை வெய்யிலுக்கு குலதெய்வம் இல்லாமல் வேறென்னவாம்...? சசி துரை, சிறப்பு நிருபர்  ......................

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ரூ.3.06 கோடிக்கு போனது

தேனி, மார்ச்.26 - தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6-ந் தேதியில் இருந்து மே 13-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  மறுஏலம் 26.3.2025 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதில் ராட்டினம் நடத்துதல் ஏல...

தேனி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர்

தேனி, மார்ச்.25- தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் குறைந்த விலையில் மருந்துகளை வழங்க "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் கடந்த 24.2.2025-அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பி.பார்ம்/ டி.பார்ம் (B.Pharm/D.Pharm) படித்த 1000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் 10 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவுத்துறையின் முலம் 8 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு தேவையான தரமான மருந்துகள் சந்தை மதிப்பை காட்டிலும் 75% குறைந்த விலையில் கிடைக்கிறது.  மேலும் ஜெனரிக், பிரான்டட் மருந்துகளும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் சர்ஜிகல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து ம...

தேனி மாவட்டத்தில் கிரசர்களில் உற்பத்தி செய்யப்படும் 70% கனிமங்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் முறைகேடாக கேரளாவிற்கு கடத்தி செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு : டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் குற்றச்சாட்டு

தேனி, மார்ச்.24- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களிடம் தமிழ்நாடு மண் லாரி உரிமையாளர்கள் பெடரேசன் தலைவர் செல்ல. ராஜாமணி தலைமையில் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி, உத்தமபாளையம் தாலுகா டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனியாண்டி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி, கிரசர்களில் இருந்து செயற்கை மணல் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்து செல்லும் லாரிகளுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு ட்ரான்சிட் பாஸ் கொடுக்க மறுக்கும் கிரசர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல அனுமதி பெறாமல் முறைகேடாக நடைபெற்று வரும் கல்குவாரி, கிரசர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 5.3.2025 முதல் தேனி மாவட்டத்தில் இயங்குகின்ற கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு லாரி தொழிலையும், கட்டுமான தொழிலையும், முடக்குகின்ற வகையில் கல்குவாரி கிரசர்களில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்களுக்கு யூனிட்டுக்கு தலா ரூ.1000 விலை உயர்த்தி ஜல்லி ஒரு ...

திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி; தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி போராட்ட குழுவினர் நடைபயணம்: தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்

தேனி, மார்ச்.24- தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டுகள் கோரிக்கையான திண்டுக்கல் முதல் குமுளி (லோயர் கேம்ப்) வரை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வரை போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் 23.3.2025 அன்று தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்த நடைபயணத்தை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்து போராட்ட குழுவினருடன் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றார். இந்நிகழ்வில் ரயில் பாதை போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., லாசர், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், கவுரவ தலைவர் சந்திரகுமார், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன், சமூக ஆர்வலர் சிதம்பரம் உள்பட ரயில் பாதை திட்ட போராட்ட குழுவினர், வர்த்தக பி...

தேனி தாலுகா, அல்லிநகரம் மலையடிவார கல்குவாரியில் இமாலய கனிமவளக் கொள்ளை: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் நூதன முறையில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த திட்டம்

தேனி, மார்ச்.22- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வீரப்ப அய்யனார் கோவில் வழியாக பூதிப்புரம் செல்லும் சாலையில் "சிவராம் " என்பவர் நடத்திவரும் கல் குவாரியிலிருந்து தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலமாக கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிக கனிம வளம் முறைகேடாக சட்ட விரோதமாக வெடி மருந்துகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவு கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக அபராதம் விதிக்கப்பட்ட இந்த குவாரி தொடர்ந்து செயல்படுவது எப்படி? தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் உதவியுடன் ஜரூராக இமாலய அளவு கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த குவாரியை முற்றுகையிட்டு உள்ளே கனிம வளங்களை கொள்ளையடித்துக் கொண்டுள்ள...

திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி: தேனியில் இருந்து திண்டுக்கல் வரை போராட்ட குழுவினர் மார்ச் 23-ல் நடைபயணம்

தேனி, மார்ச்.22- திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு ஆலோசனை கூட்டம் தேனியில் 21.3.2025 அன்று நடைபெற்றது. கூட்ட முடிவில் போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டுகள் கோரிக்கையான திண்டுக்கல் முதல் குமுளி (லோயர் கேம்ப்) வரை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி மத்திய,  மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களும், பல்வேறு போராட்டங்கள், பேரணிகளும் நடத்தி உள்ளோம். திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் வரை இருந்த திட்டம் 2016-ம் ஆண்டு திண்டுக்கல் முதல் சபரிமலை வரை என மாற்றப்பட்டது. இதனால்  பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இந்த திட்டம் செயல்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தினை திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் மற்றும் லோயர் கேம்ப் முதல் சபரிமலை என 2 திட்டமாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அப்போது தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினர் மற்று...