Skip to main content

தேனியில் ஒக்கலிகர் நலச்சங்கம் சார்பில் கல்வி பரிசளிப்பு விழா

தேனி, ஜன.13-

தேனி ஒக்கலிகர் (காப்பு) நலச்சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, 19-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு என முப்பெரும் விழா 12.1.2025 அன்று தேனியில் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜனகரன் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்த அனைவரையும் மாநில பொருளாளர், தேனி ஒக்கலிகர் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் வரவேற்றார்.

விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ரத்தினசபாபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

விழாவில் தேனி ஒக்கலிகர் (காப்பு) நலச்சங்க தலைவர் மும்மூர்த்தி, செயலாளர் ராஜவேல், பொருளாளர் உடையாளி, தேனி ஒக்கலிகர் கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை செயலாளர் அசோகன், பொருளாளர் மாதவன் மற்றும்  தேனி ஒக்கலிகர் காமதேனு குடும்ப நல நிதித்திட்ட தலைவர் ராஜன், செயலாளர் ராஜு, பொருளாளர் விவேகானந்தன் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் தேனி ஒக்கலிகர் கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை துணைத்தலைவர் ரவிச்சந்திரன் என்று கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் .

............................

Comments