தேனி, ஜன.12-
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா 11.1.2025 அன்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்த நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உப தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார்
கல்வியியல் கல்லூரி செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் போது கல்வியியல் கல்லூரி பி.எட்., எம்.எட்., மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதற்கிடையே மாணவிகளுக்கு இடையே மற்றும் பேராசிரியர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை உறவின்முறை நிர்வாகிகள் வழங்கினர். முடிவில் பொருளறிவியல் துறை உதவி பேராசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
...........................
Comments