தேனி, ஜன.12-
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா 11.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்துரை வழங்க கல்லூரி மாணவிகள் சார்பில் ஜாதி, மத, இன கலாச்சார பேதமின்றி மாவிளை தோரணங்கள் அலங்கரிக்க புத்தரிசியிட்டு புதுப்பானையில் சமத்துவ பொங்கல் வைத்தனர்.
விழாவின்போது மாணவிகளுக்கு இடையே கோலப்போட்டி, கபடி, ரொட்டி சாப்பிடுவது, தண்ணீர் நிரப்புதல், எலுமிச்சை மற்றும் ஸ்பூன், பலூன் உடைத்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற போட்டிகளும், கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி அகாடமிக் டீன் கோமதி, கல்லூரி சி.ஓ.இ சரண்யா, துணை முதல்வர்கள் சுசிலா சங்கர், கிருஷ்ணவேணி, உமாகாந்தி, விடுதி காப்பாளர் உமா ஆகியோர் தலைமையில் மாணவிகள் செய்திருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.............................. ...
Comments