Skip to main content

போடி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் புனரமைப்பு பணிகளுக்காக பாலாலயம்: வானில் வட்டமிட்டு ஆசீர்வதித்த கருட பகவான்

தேனி, ஜன.12-

தேனி மாவட்டம், போடி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் புனரமைப்பு பணிகளுக்காக பாலாலயம் செய்த போது வானில் வட்டமிட்டு கருட பகவான் ஆசிர்வதித்தது.

போடி பரமசிவன் மலைக்கோவில் கிரிவலப் பாதையில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது 

இந்த கோவிலை கேரளா மாநிலத்தை சேர்ந்த முனீஸ் அபிஜித் நம்பூதிரி கட்டி பராமரித்து பாதுகாத்து வருகின்றார் இந்த நிலையில் இந்த கோவில் புனரமைப்புப் பணிகளை கடந்தாண்டு தொடங்கினார் 

அந்த வகையில் நேற்று முறைப்படி கருவறையில் இருக்கும் விக்கிரகத்தை எடுத்து மற்றொரு இடத்திற்கு புனர்நிர்மாணம் செய்யும் சடங்கு சகல பரிகாரங்களுடன் முறைப்படி செய்யப்பட்டது. 


அப்போது கோவிலின் கோபுர கலசத்தை அகற்றும் போது வானில் கருட பகவான் வட்டமிட்டு ஆசீர்வாதம் செய்தது. நீண்ட நேரமாக கருட பகவான் வானில் வட்டமிட்டு ஆசீர்வதித்த காட்சிகள் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதும். அனைவரும் கைகூப்பி வணங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புனரமைப்பு குறித்து கோவில் நிர்வாகி தெரிவிக்கையில், கோவில்களை மீண்டும் புதுப்பித்துக்கட்டி கும்பாபிஷேகம் செய்ய நித்திய பூஜை செய்ய வேண்டும் அப்படி புனர்நிர்மாணம் செய்கிறபோது தெய்வ விக்கிரகங்களைப்  பாதுகாத்தும், நித்திய பூஜைகள் நிற்காமல் நடைபெறவும் செய்யப்படுவதே பாலாலயம். இதை இளங்கோவில் என்று சொல்வார்கள். கோவில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்றும், பணிகள் நிறைவு பெற்ற பின் முறைப்படி கும்பாபிஷேக விழா அல்லது விமர்சையாக நடத்தப்படும் எனவும் கோவில் நிர்வாகி முனீஸ்அபிஜித் நம்பூதிரி தெரிவித்தார். 

இந்த பாலாலயம் நிகழ்வில் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் ஜி, கோவில் நிர்வாகி மலர்விழி, கோவில் சிற்பக் கலைஞர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

......................

Comments