தேனி, ஜன.10-
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா 10.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.. குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சரவணன், பி.சி.ஆர் கோர்ட்டு நீதிபதி அனுராதா, போக்சோ கோர்ட்டு நீதிபதி கணேசன், கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் MKM.முத்துராமலிங்கம், செல்வன் பாண்டி மணி, ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்கள் ஜெயபாரதி, காண்டீபன், மல்லீஸ்வரன் சந்தானகிருஷ்ணன், செல்வகுமார் உள்பட வக்கீல் சங்க நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொங்கல் விழா கொண்டாட நீதிபதிகள் டிரம்ஸ் முழக்கத்துடன் அழைத்து வரப்பட்டு ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிறுவர்கள் சிலம்பம் விளையாட்டு வரவேற்பு அளித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.. இதனைத் தொடர்ந்து பொங்கல் விழா பூஜைகளும், வக்கீல்களுக்கு இடையே பானை உடைத்தல், இசை நாற்காலி, செங்கல் பளு தூக்குதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை நீதிபதிகள் வழங்கினார்கள்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் விழாவில் கலந்து கொண்ட வக்கீல் சங்க நிர்வாகிகள் உள்பட அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
........................
Comments