Skip to main content

Posts

Showing posts from July, 2024

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர், எஸ்.பி-யிடம் கோரிக்கை மனு

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜெய் ஆஞ்சநேயா நகர் குடியிருப்போர் நலசங்க செயலாளர் இளங்கோ தலைமையில் அப்பகுதியில் குடியிருப்போர் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி வட்டம், வீரபாண்டி கிராமம், பழனிசெட்டிபட்டி, ஜெய் ஆஞ்சநேயா நகரில் சுமார் 300 குடும்பங்களுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். மேற்படி எங்கள் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுமார் 500 குடும்பங்களுக்கும் மேலாக சூர்யா அவென்யுவில் குடியிருந்து வரும் பொதுமக்களும் தேனி வட்டம்,வீரபாண்டி கிராமம், சர்வே எண். 1454-ல் தேனி to குமுளி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காக பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு போகக்கூடிய பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தும், மேற்படி பாதையில் தற்போதைய சர்வே எண். 1454/1A-ல் கட்டுப்பட்ட நிலத்தில் கிழக்கு பக்கம் சுமார் 5 மீட்டர் அகலத்தில் தென் வடலாக விவசாயத்திற்கு பல ஆண்டுகளாக வாய்க்காலில் பாலம் அமைத்து பயன்படுத்தி வந்தும், அதன்பிறகு மேற்படி பாதையின் இருபுறமும் குடியிருப்பு...

தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக  கட்டப்பட்டுள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை 29.7.2024 அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, புதிய அலுவலக கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து அலுவலக பகுதிகளை பார்வையிட்டார். அப்போது தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகன்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மோனிகா, ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, பிரகாஷ், சங்கீதா, மாலா, பொறியாளர்கள் சோனா, அஜய், ஒப்பந்ததாரர் முத்து கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய  ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில், தரை தளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைர், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் பொறியாளர்களுக்கான தனித்தனி அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட அரங்கம், கணினி அறை...

இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 11-ல் நடக்கிறது: வார வழிபாடு கூட்டத்தில் முடிவு

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் வார வழிபாடு கூட்டம் 28.7.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர்  ஜீவா தலைமை தாங்கினார்.  மாவட்ட துணை செயலாளர்  இரத்தனம் முன்னிலை  வகித்தார்.  கூட்டத்திற்கு நிறுவனர் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ்,  மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வழிகாட்டினர். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழ்கண்ட  தீர்மானங்ள்  நிறைவேற்றப்பட்டன  தீர்மானம் (1) பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் வெண்கல  பதக்கம் பெற்ற சகோதரி  "மனுபாக்கர்" அவர்களுக்கு இந்து எழுச்சி முன்னணி பாராட்டுகளையும்,                        வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொள்கிறது  தீர்மானம் ( 2)  தேனி-வீரபாண்டி இடையே உள்ள "மின்அரசுநகர்" பகுதி எதிர்ப்புறம் உள்ள விவசாய பூமியான தென்னந்தோப்பை    மதமாற்றத்திற்கான கேந்திரமாக  பயன்பட...

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்: 85 தம்பதிகள் பயனடைந்தனர்

  தேனியில் மகப்பேறு மருத்துவத்தில் கடந்த 3 தலைமுறைகளாக புகழ்பெற்ற தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக இன்று (28.7.2024) ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் கம்பம் குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமை கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், கவுன்சிலர் அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா, அன்புகுமாரி, ரோஜாரமணி, விஜயலட்சுமி,  வீருசிக்கம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த முகாமில் திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், தொடர்ச்சியாக கருச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளவர்கள் என்று 85-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.            அவர்களுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, விந்தணு பரிசோதனை மற்றும் மருத்துவ பர...

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு:வீட்டுக்கு 2 சிம்னி விளக்குகள் மற்றும் 10 லிட்டர் மண்எண்ணெய் வழங்க வேண்டும்; தேனி கலெக்டர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் பெட்டர்மாஸ் லைட்டுன் நூதன முறையில் கோரிக்கை

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் மாவட்ட தலைவர் முருகவேல், மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சியினர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும்,பல மணி நேரம் மின்வெட்டு தலை தூக்கியது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே செல்லும் நிலை ஏற்பட்டது.மேலும் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் கற்கால வாழ்க்கையான சிம்னி விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு, ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல்லில் அரைத்து பழகினர். கடந்த 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்போதைய முதலமைச்சர் படிப்படியாக மின்வெட்டை சரி செய்து மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். மேலும் 2011 இல் இருந்து 2021 வரை அதிமுக ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக மாற்றியதுடன் மின் கட்டணம் என்பது ஒரு முறை கூட உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக அரசு 2021 இல் பொறுப்பேற்றதில் இருந்து பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.குறிப்பாக அதிமுக ஆட்சிய...

தேனி-மதுரை சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி: ஜூலை 19 முதல் வாகன போக்குவரத்தில் மாற்றம்

தேனியில் உள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் காரணத்தால் 19.7.2024 முதல் 28.7.2024 வரை பொதுமக்கள் மாற்றுப்பாதையில்  செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா  தலைமையில் 13.7.2024 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  முத்து மாதவன், தேனி துணை காவல் கண்காணிப்பாளர்  பார்த்திபன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ரவிக்குமார், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா, தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்பட பலர் உள்ளனர்.  அப்போது கூட்டத்தில் மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை-49 நீட்சி சாலையில் தேனி-ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில் சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இரயில்வே மேம்பாலம் கட்டுதல் பணி நடைபெற்று வருவதால் 19.7.2024 முதல் 28.7.2024 வரை பொதுமக்கள் மாற...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சென்னமராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சங்க தீபன் அப்துல்லா, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்க மீனா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க தேன்மொழி, அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.  ஆர்ப்பாட்டத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்க விதிக்கப்பட்ட மறைமுக தடையை புதுப்பிக்க கூடாது. ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சிவபால...

தேனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட கலெக்டர் அவர்களின் நிதியிலிருந்து ரூ.31.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானங்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 11.7.2024 அன்று திறந்து வைத்தார். அப்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர். உடல் நலத்தையும், மன நலத்தையும், பேணி காப்பதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாகும். குழந்தைகள் தொடர்ச்சியாக விளையாடுவதன் மூலம்  புத்துணர்வும் தன்னம்பிக்கையும், பெற முடியும், மேலும் சிறு வயதிலே தலைமைத்துவத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். இதற்காகவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டுவிழா நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் மாநில தேசிய அளவில்  பங்குபெ...

தேனி அருகே சாலையில் இறந்து கிடந்த நாய்யை அப்புறப்படுத்திய சமூக ஆர்வலர்

தேனி-மதுரை செல்லும் சாலையில் க.விலக்கு அருகே நாய் ஒன்று துர்நாற்றம் வீசிய நிலையில் இறந்து கிடந்தது. ஊராட்சி துப்புரவு பணியாளர்களும் அப்புறப்படுத்தவில்லை.  இது குறித்து அந்த வழியாகச் சென்ற சமூக ஆர்வலரும்  ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருமான ரஞ்சித்குமார் தானே முன் நின்று  அனைவருக்கும் இடையூறாக கிடந்த இறந்த நாயை மண்வெட்டியால் குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினார்.  மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசாதபடி இடத்தை துப்புரவும் செய்தார். இதனை பார்த்த பொதுமக்கள் சமூக ஆர்வலரை பாராட்டினர். சிவபாலன், சிறப்பு நிருபர் 

தேனி திமுக வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு பாராட்டு விழா

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு பாராட்டு விழா தேனி அருகே உள்ள ஏ.பி.எம் ஹோட்டலில் 8.7.2024 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் பவானி முத்துராஜா தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் மாலா காமராஜ், துணைத்தலைவர் ஜெரினா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா, மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் மணிமேகலை, கிருஷ்ணவேணி, கலையரசி, ராதிகா, அழகுமணி, சகிதா பானு மற்றும் வலைதள பொறுப்பாளர்கள் அனுசுயா, இந்துமதி உள்பட தி.மு.க நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனுக்கு மகளிர் அணியினர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு உபசரிப்பு அளிக்கப்பட்டது. சிவபாலன், சிறப்பு நிருபர் 

தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 30 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் 3-வது நாளாக உத்தமபாளையம் தாலுகாவிற்கு  உட்பட்ட க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு), மேலக்கூடலூர் (வடக்கு),  கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 2.7.2024 அன்று நடைப்பெற்றது.              அதுபோல பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் கீழவடகரை, வடகரை பகுதி- 1, பகுதி- 2, தென்கரை பகுதி- 1, பகுதி-2 ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி  தலைமையிலும், தேனி தாலுகா அலுவலகத்தில் பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன்  தலைமையிலும், ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் மொட்டனூத்து ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய கிராமங்களுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன்  தலைமையிலும்,      போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்தில் டொம்புச்சேரி, கூழையனூர், போட...

தேனி எல்.எஸ்.மில் நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கடமலைக்குண்டு, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் தேனி எல்.எஸ்.மில் நிர்வாகம் சார்பில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட அளவில் வறுமை கோட்டுக்கு கீழ் 131 மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டு இந்த குழந்தைகளுக்கு தேவையான காதொலி கருவி, காலிபர் ஷூ, ரோலேட்டர், சிபி சேர், வீல் சேர், செயற்கை கால் மற்றும் செயற்கை என ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வழங்க எல். எஸ்.மில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி வீரபாண்டி அருகே உள்ள எல்.எஸ் மில் 2-வது யூனிட் வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இணை நிர்வாக இயக்குனர் சாந்தி மணிவண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மில் உதவி பொது மேல...