தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர், எஸ்.பி-யிடம் கோரிக்கை மனு
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜெய் ஆஞ்சநேயா நகர் குடியிருப்போர் நலசங்க செயலாளர் இளங்கோ தலைமையில் அப்பகுதியில் குடியிருப்போர் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி வட்டம், வீரபாண்டி கிராமம், பழனிசெட்டிபட்டி, ஜெய் ஆஞ்சநேயா நகரில் சுமார் 300 குடும்பங்களுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். மேற்படி எங்கள் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுமார் 500 குடும்பங்களுக்கும் மேலாக சூர்யா அவென்யுவில் குடியிருந்து வரும் பொதுமக்களும் தேனி வட்டம்,வீரபாண்டி கிராமம், சர்வே எண். 1454-ல் தேனி to குமுளி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காக பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு போகக்கூடிய பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தும், மேற்படி பாதையில் தற்போதைய சர்வே எண். 1454/1A-ல் கட்டுப்பட்ட நிலத்தில் கிழக்கு பக்கம் சுமார் 5 மீட்டர் அகலத்தில் தென் வடலாக விவசாயத்திற்கு பல ஆண்டுகளாக வாய்க்காலில் பாலம் அமைத்து பயன்படுத்தி வந்தும், அதன்பிறகு மேற்படி பாதையின் இருபுறமும் குடியிருப்பு...