இதில் ஆங்கில கால்வாய் (English Canal) மொத்த 36 கிலோ மீட்டர். இதுவரை இந்தியாவில் இருந்து ஒரு வழிப்பாதை அதாவது இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்தி சென்று, பின்னர் அங்கிருந்து படகில் வந்து விடுவார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து நீந்தி பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கிலோ மீட்டர் தூரத்தை சிறுவன் சினேகன் நீந்தி கடந்த 19.7.2023 காலை 10.50 மணிக்கு இங்கிலாந்து வந்து சாதனையை படைத்த இந்தியாவின் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த கடல் மற்ற கடல்களை போல் இல்லாமல் அதிக நீரோட்டம் அதாவது (கரண்ட்) உள்ளது. குளிர் 14 முதல் 15 டிகிரி வரையும் மற்றும் இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாகவும், கடல் நாய்கள், சுறா மீன்களும் உள்ளது.த தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு தேனியை சேர்ந்த சிறுவன் சினேகன் இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்த இரண்டாவது தமிழர் ஆவார்.
இந்த சாதனை புரிந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் சிறுவன் சினேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தியது. இந்த நீச்சல் சாதனை நிகழ்த்திய சிறுவன் சினேகன் கடந்த ஆண்டு மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்திய சாதனையும், வடஅயர்லாந்து கடலில் நீந்தியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
G சிவக்குமார் நிர்வாக ஆசிரியர்
R.ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments