Skip to main content

தேனி மாவட்டத்தில் 4 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும்  500  நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை  காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6.6.2023 அன்று திறந்து வைத்தார். இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில்  புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம். தேனி அல்லிநகரம் நகராட்சி ஒண்டிவீரன் நகர் பகுதியில்  ஒரு நகர் புற நலவாழ்வு மையம். போடிநாயக்கனூர் நகராட்சி பார்க் ரோடு பகுதியில் ஒரு நகர்ப்புற நலவாழ்வு மையம் . கம்பம் நகராட்சி டி.எஸ்.கே நகர் பகுதியில் ஒரு நகர்ப்புற நலவாழ்வு மையம் என மொத்தம் 4 நகர்புற நலவாழ்வு மைய கட்டிங்களை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இதனைத்தொடர்ந்து  கம்பம் நகராட்சி டி.எஸ்.கே நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  வைத்து வெளி நோயாளிகள் சிகிச்சை முறையினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோ ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் முருகன், கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கொண்டனர். இந்த நகர்ப்புற நலவாழ்வு மையமானது காலை 8 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் ,வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைகளை மருத்துவ அலுவலர்கள் வழங்குவார்கள்.இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு மருத்துவமனை  பணியாளர் என 4 மருத்துவ அலுவலர்கள் பணியாற்றுவார்கள்.

R.பாண்டியன், உதவி ஆசிரியர் 


Comments