Skip to main content

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் மூலம் 9,300 வகையான மருந்துகள் 75 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது: தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேட்டி

பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, மத்திய பா.ஜ.க அரசு ஏழைகளின் அரசாவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை முன்னேற்றும் அரசாக செயல்பட்டு கொண்டு வருகிறது. கொரோனா காலங்களில் 220 கோடி தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது. 3.5 கோடி வீடுகள் வீடு இல்லாதவர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல 17.72 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு 100 சதவீதம் கழிப்பறைகள் இல்லாத இந்தியாவாக மாறி உள்ளது. அதுபோல பெண்கள் உயர் கல்வி சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு முழுமையாக வழங்கப்படும். 9.6 கோடி இலவச கேஸ் இணைப்புகள் பா.ஜ.க அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் சிறு தொழில் செய்து பெண்கள் முன்னேற்றம் அடையும் அரசாக பா.ஜ.க அரசு உள்ளது. மத்திய அரசின் மக்கள் மருந்தகம் மூலம் 9,300 வகையான மருந்துகள் கிடைக்கிறது. இந்த மருந்தகத்தில் 50 முதல் 75 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கிறது. அதுபோல இந்திய நாட்டில் உள்ள 11 கோடி விவசாயிகளுக்கு குறிப்பாக தமிழகத்தில் 36 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இதில் இந்த பா.ஜ.க அரசு சிறப்பு என்னவென்றால் வேகம், அளவு, வெளிப்படைத்தன்மை இவைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. மோடியின் ஆட்சியில் தான் சமூக நீதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல பா.ஜ.க 9 ஆண்டு கால ஆட்சிக்கு முன்பு 7 வகையான மாற்றுத்திறனாளிகள் தன்மை தான் இருந்து வந்தது தற்போது 21 வகையான மாற்றுத்திறனாளிகள் தன்மை சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 65 ஆண்டு காலமாக இந்தியா எந்த ஒரு முன்னேற்றமும் அடையவில்லை. இந்தியாவில் இருந்து வந்தது 74 விமான நிலையம் தான். தற்போது 9 ஆண்டுகளில் மேலும் 74 விமான நிலையங்கள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல தார்ச்சாலை அமைக்கும் கிலோமீட்டர் அதிகரிப்பு, நீர் வழி சாலை வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை, எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கம், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடக்கம், ஐ.ஐ.டி. பல்கலைக்கழகங்கள் போன்றவைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. 

அது போல காஷ்மீரில் மிக உயரமான ரயில்வே பாலம், பாரீசில் உள்ள ஈபிள் டவரை மிஞ்சிய அளவிற்க்கு செனாப் பிரிட்ஜ் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு கோடி இந்தியர்கள் சுற்றுலா சென்று பார்வையிட்டுள்ளனர். குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான வல்லபாய் பட்டேல் சிலை. அதுபோல டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டு இருக்கிறது. ரேசன் கார்டுகளில் ஆதார் இணைப்பு கொடுக்கப்பட்டதின் மூலம் 4.71 கோடி போலி ரேசன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு ள்ளது.  இந்தியாவில் 40 சதவீதம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. உலகிலேயே அதிகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடந்துள்ளது இந்தியாவில் தான். புதிய பிரமாண்டமான பாராளுமன்றம் கட்டிடம் இந்திய காண்ட்ராக்டர்கள் மூலம் தான் கட்டப்பட்டுள்ளது. உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக திறன் வளர விளையாட்டு, பயிற்சி, ஸ்காலர்ஷிப் போன்றவற்றின் மூலம் திட்டங்கள் படுத்தப்பட்டு வருவது பா.ஜ.க அரசுதான். இந்தியர்களின் கனவனா ராமர் கோவில்லை கட்டியது. இந்த பா.ஜ.க அரசு தான். நாட்டின் கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க அரசு. அதுபோல தமிழ்நாட்டின் சிறப்பு பற்றி கூட பல இடங்களில் எடுத்துரைத்து நமக்கு பெருமை சேர்த்தவர் மோடி தான். இந்தியாவில் முதல் தானியங்கி கிடங்கு தேனி மாவட்டம் போடியில் அமைய உள்ளது. இது நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை ஆகும். தற்போது கங்கை சுத்தமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு நன்றாக உள்ளது. 20 ஆயிரம் இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 2.97 கோடி மக்கள் கொரோனா காலங்களில் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியா உலக நாடுகளின் குருவாக உள்ளது. 9 ஆண்டுகளில் இருந்து வந்த இந்த வளர்ச்சி மேலும் 5 ஆண்டுகள் தொடர மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதே இந்திய மக்களின் தாரக மந்திரமாக உள்ளது. இவ்வாறு தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி தெரிவித்தார். அப்போது மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி, தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் பி.சி.பாண்டியன், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் மாரியம்மாள் உள்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தேனி மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட அலுவலக செயலாளர் தேவகுமார், தேனி நகர தலைவர் மதிவாணன் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

R பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments