Skip to main content

Posts

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்

தேனி, ஜூலை.15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை 15.7.2025 அன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம். பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,34 ஆகிய வார்டு பகுதிகளுக்கு கோவிந்தன் மயில்தாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இதேபோன்று கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 ஆகிய வார்டு பகுதிகளுக்கு உலகத்தேவர் தெரு சமுதாய கூடத்திலும், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 1 முதல் 7 வார்டுகளுக்கு பி.ரெங்கநாதபுரம் பகுதி சமுதாய கூடத்திலும், ஆண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்ட அனுப்பப்பட்டி, போடிதாசன்பட்டி, ஏத்தக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டி சமுதாய கூடத்திலும், க.மயிலாடும்பாறை ஊராட்சியில் கடமலைக்குண்டு பத்ரகாளியம்மன் மண்டபத்திலும் நடைபெற்றது.  இந்த முகாம்களில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ....

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி: காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு சார்பில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.15- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை உள்பட 15 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.  இந்த கோரிக்கை மனுவுடன் ரேசன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், ஜாதி சான்று நகல் இணைத்துள்ளோம். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வீடு இல்லாத எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ............................ நாகராஜ், தலைமை நிருபர் 

கம்பம் அருகே மகளிர் சுய உதவி குழுக்கள் பெயரில் நடத்தும் கல்குவாரியில் தனிநபர்கள் குறுக்கீடு: தேனி கலெக்டரிடம் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.15- தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு வருவாய் துறைக்கு சொந்தமான புல எண் 1372/1-ல் சங்கிலி கரடு கல்குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரி 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 6 பகுதிகள் ஏலம் விடப்பட்டு 1-ம் பகுதி சங்கிலிக்கரடு கல்லுடைப்போர் மகளிர் சங்கத்திற்கும் 2-ம் பகுதி கே.கே.பட்டி கல்லுடைப்போர் மகளிர் சங்கத்திற்கும், 3-ம் பகுதி அன்னை சத்யா மகளிர் சுய உதவிக்குழு சங்கத்திற்கும் 4-ம் பகுதி அன்னை தெரசா கல்லுடைக்கும் மகளிர் நல முன்னேற்ற சங்கத்திற்கும் 5-ம் பகுதி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மகளிர் சுய உதவி குழுவிற்கும், 6-ம் பகுதி சங்கிலி கருப்பன் தண்ணீர் பாறை கல்லுடைக்கும் மகளிர் நலசங்கத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்குவாரிகளை சில தனிநபர்கள் கூட்டாக சேர்ந்து பல கோடிகள் செலவு செய்து மகளிர் சுய உதவி குழுக்கள் பெயரில்...

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்: ஜூலை 20-ந் தேதி நடக்கிறது

தேனி, ஜூலை.13- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் வார வழிபாட்டு நிகழ்ச்சி 13.7.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் எல்.ஆர். ஐயப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன். இரவி கலந்து கொண்டு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் முக்கிய தீர்மானக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன தீர்மானம் (1): வருகின்ற 20.7.2025 அன்று இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டங்களில் ஒன்றாக, ஒருநாள் பண்பு பயிற்சி முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த முகாமின் நோக்கம் சங்க உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதாகும். மாவட்ட அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். தீர்மானம் (2): மதுரை மாநகராட்சி அ...

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன் பிறந்த நாள் விழா: தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்

தேனி, ஜூலை.13- தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.வி.ஆர். ராஜன் பிறந்தநாள் விழா, தேனி பென்னிகுவிக் லயன்ஸ் கிளப் அறிமுக விழா, வைகை ஸ்கேன், திரவியம் கல்வியியல் கல்லூரி, தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 13.7.2025 அன்று லட்சுமிபுரம் ஸ்ரீ சீரடி அன்ன சாய்பாபா கோவில் வளாக பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை தாங்கி டாக்டர் வி.ஆர்.ராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மருத்துவ முகாம் மற்றும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.வி.ஆர்.ராஜன் வரவேற்றார். இந்நிகழ்வுகளில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, தேனி திமுக வடக்கு நகர செயலாளர் பாலமுருகன், வைரஸ் கேன் திரவியம் கல்லூரி தாளாளர் டாக்டர். பாண்டியராஜன், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்....

பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான கருத்தரங்கம் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் நடந்தது

  தேனி, ஜூலை.13- தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் (Awarenes Programme on Gender Sensitisation and Elimination of Violence Against Womens விழிப்புணர்வு திட்டம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் 12.7.2025 அன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.என். மஞ்சுளா, எஸ் ஸ்ரீமதி, எம் ஜோதிராமன், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பாலின பாகுபாடு பெண்களின் கல்வி பற்றிய அலட்சியம் திருமணத்தில் கட்டாயம் குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ள காரணத்தினால், பொதுமக்களுக்கு சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தெளிவான தகவல்களை வழங்கி அவர்களது எண்ணங்கள் மற்றும் நடத்தை முறைகளை மாற்றத்தை ஏற்படுத்தவும். பெண்கள் மீதான எந்தவொரு வகையான வன்முறையையும் மெய்யியல் உளவியல். சொற்சாடல் பொருளாதார அடிப்படை குறைக்கவும்....

தேனியில் நாளை மறுநாள் நடக்கிறது: எல்.எஸ்.மில்ஸ் சார்பில் இலவச செயற்கை கை, கால் வழங்க பரிசோதனை முகாம்

தேனி, ஜூலை.10- தேனி எல்.எஸ்.மில்ஸ் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகள், சர்க்கரை நோய் மற்றும் விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் மற்றும் காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச செயற்கை கை, கால், காது கேட்கும் கருவி ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நாளை மறுநாள் சனிக்கிழமை (12.7.2025) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13.9.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தேனி அருகே வீரபாண்டி பை பாஸ் சாலையில் உள்ள எல்.எஸ்.மில்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது.  இந்த பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அடையாள அட்டையின் நகல் ஒன்றும் கொண்டு வரவேண்டும். முகாமில் சென்னையில் இருந்து பிரீடம் டிரஸ்ட் சிறப்பு டாக்டர்கள் மற்றும் செயற்கை கை, கால்கள் தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு செயற்கை கை மற்றும் கால் செய்ய அளவெடுப்பார்கள். மேலும் காது கேளாதவர்களுக்கான பரிசோதனைகள் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்படும்.  இந்த பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அனைத்து வகையான உபகரணங்களும் தயார் ...

தேனியில் பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூலை.8- பாரதிய மஸ்தூர் சங்க தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி அல்லிநகரம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயல் தலைவர் பாலன் தலைமை தாங்கினார்.  மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.  கூட்டத்தில் பாஜக தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.  கூட்டத்தின் போது தேனி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் தேனி மாவட்ட தலைவராக அய்யப்பராஜ், மாவட்ட செயலாளராக பாலமுரளி, மாவட்ட பொருளாளராக முருகானந்தன் மற்றும் மாவட்ட செயல் தலைவராக பாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் இந்திய அளவில் 13 தொழிற்சங்கங்கள் சார்பில் 9-ந் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கம் பங்கேற்காது என்று முடிவு செய்யப்பட்டது. அதுபோல டாஸ்மாக் தொழிலாளர்கள் பணிச்சுமை  நெருக்கடியை தவிர்க்க தமிழசு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. .......................... நாகராஜ், செய்தி ஆ...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா

  தேனி, ஜூலை.8- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கனரா வங்கியின் 120-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு தேனி கனரா வங்கி மற்றும் கல்லூரியின் பசுமை சூழல் செல் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் உபதலைவர் A.S.ஜீவகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர  டாக்டர்.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் தேனி மாவட்ட கனரா வங்கியின் துனை பொதுமேலாளர் இந்திரயா, உதவி பொது மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு 200 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். மேலும் உலகளவில் மாறி வரும் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்க மரங்கள் உதவுவதை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் சிவகுண்டலம், வில்வம், இழுப்பை, நாகலிங்கம், மருதம், சரக்கொன்றை போன்ற பழைமையான மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜ...

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

  சென்னை, ஜூலை.4- தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை சர்.பி.டி தியாகராய அரங்கில் 3.7.2025 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் க.குமார் தலைமை தாங்கினார். விழாவில் எழுச்சி தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் M.P., வாழும் ஆழ்வார் எஸ் .ஜெகத்ரட்சகன் M.P.,  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் டாக்டர் பி.ஆனந்த், விருகை வி.என். கண்ணன், மணிமாறன் இயக்குனர்  கனரா பேங்க், வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் நடைபெறுவது போல் மூத்த பத்திரிகையாளர்களுக்கு பொற்கிழி, ஏழைப்பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி  மடிக்கணினிகள் மற்றும் இருசக்கர சைக்கிள், மாணவ மாணவிகளுக்கு கல்வி நிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் என ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவின் போது சங்கத்தின் சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் வி.சி.க தலைவர் தொல்.திருமா அவ...