Skip to main content

Posts

தேனியில் ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுடனான ஆய்வு கூட்டம்: கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் 6.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள், குடிநீர் வினியோகம், சுத்தம் சுகாதாரம் தொடர்பான பணிகளை தானே நேரடியாகச் சென்று ஆய்வு செய்து குறை நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. அவற்றை கண்காணித்து தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் விடுதலின்றி கலந்து கொண்டு தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அருகாமையில் குட்கா மற்றும் இதர போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து மாணவர் நலம் பேணும் பொருட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா போன்ற கால கட்டத்தில் சுகாதாரத்துறையுடன் இணைந்து தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 15-வது நிதிக்குழ...

ரத்தினம் நகரில் சாக்கடை பாலத்தை சரிசெய்யா விட்டால் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம்: இந்து எழுச்சி முன்னணி அறிவிப்பு

தேனி மாவட்டம், தேனி யூனியன், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள ரத்தினம் நகர் 8-வது தெரு பொறியாளர் ஸ்ரீதர் அவர்கள் வீட்டின் முன்பு மிக மோசமான நிலையில் சாக்கடை இருக்கிறது. அவருக்கு 3 வயதில் குழந்தை உள்ளது என்றும், தனது பக்கத்து வீட்டில் 6 மாத குழந்தை உள்ளதும் என்றும் கூறுகிறார். இந்நிலையில் தனது வீட்டின் முன்பு நன்றாக இருந்த பாலத்தை உடைத்து நாங்கள் சீரமைத்து தருகிறோம் என்று சொல்லி உடைத்து இப்போது 17 நாட்கள் ஆகின்றது. இதுவரை வேலை  ஆரம்பிக்கவே இல்லை அதில் இருந்து கொசுக்கள் வருகின்றது. குறிப்பாக மழை நேரத்தில் தண்ணீர் பாம்பு வருகிறது. குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்படுவதாக தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து வீட்டின் உள்ளே வருகிறது. வீட்டின் முன்பு சாக்கடை தேங்கி நிற்கிறது . இதனால் மிகவும் மன உளைச்சலான சூழ்நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். மழைக்காலங்களில் ரத்தினம் நகர் முழுவதும் மிக மோசமான நிலையில் உள்ளது. வண்டி, வாகனங்கள் செல்வதற்கு நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது . அதுபோல ரத்தினம் ...

லோயர்கேம்ப் பகுதியில் தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் கண்ணகி கோட்டம் அமைக்கப்படும்: நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தகவல்

தேனி முல்லை பெரியாறு முத்தமிழ் மன்றம், மிஸ்ரா இலக்கிய பேரவை சார்பில் மங்கலதேவி கண்ணகி சித்ரா பௌர்ணமி விழா தேனியில் நடைபெற்றது. விழாவிற்கு ஜே.ஆர்.ஆர் சிவில் டெக் குரூப்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உப்புக்கோட்டை பச்சையப்பன் கல்வி குழுமம் தலைவர் லட்சுமிவாசன் முன்னிலை வகித்தார். விழாவை டைமண்ட் குரூப்ஸ் சேர்மன் பாண்டிசெல்வம் தொடங்கி வைத்தார்.  விழாவில் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்ணகி திருவுருவபடத்தை திறந்து வைத்து, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேராசிரியர் பத்மினி பாலா, தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் பாலமுருகன், தேசிய செட்டியார்கள் பேரவை மாநில செயலாளர் சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை தேசிய செட்டியார்கள் பேரவை தேனி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தமிழக-கேரளா எல்லை பகுதியில் அமைந...

வீரபாண்டியில் ஆற்று படித்துறையில் உள்ள துணிகளை அகற்ற வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் கோரிக்கை மனு

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் தேனி நகர செயலாளர் அரண்மனை முத்துராஜ் தலைமையில் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், வருகின்ற 9.5.2023 -ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தற்போது இருந்தே  தங்களது நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வீரபாண்டி ஆற்றின் பாலத்தின் மேற்குப்புறமும், கிழக்குப்புறமும் உள்ள படித்துறையில் பக்தர்கள் விட்டு செல்லும் பழைய துணிகள் மிக அதிகமாக சேர்ந்து அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் ஆற்றில் குளிக்க வரும் பக்தர்களுக்கு மிகவும் அசௌகரியமான சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே படித்துறைகளை சுத்தம் செய்தும், இந்த படித்துறையில் மின் விளக்கு  இல்லாததால்  பக்தர்கள் நீராடுவதற்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாலும் படித்துறைகளில் மின்விளக்கு வசதியும் செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர செயலாளர் தினேஷ...

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 17-ந் தேதி தொடங்குகிறது: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, உத்தமபாளையம்;, பெரியகுளம் மற்றும்  தேனி ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் 17.5.2023 முதல் 26.5.2023 வரை (19.5.2023 மற்றும் 22.5.2023) ஆகிய நாட்கள் நீங்கலாக வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.  இதில் போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி  கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை கிராமங்களுக்கு 23.5.2023 அன்றும், கொட்டக்குடி, போடி-வடக்குமலை, அகமலை கிராமங்களுக்கு 24.5.2023 அன்றும் வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதேபோன்று ஆண்டிபட்டி தாலுகாவில் கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1, 2 கிராமங்களுக்கு 17.5.2023 அன்றும், புலிமான் கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட்-1, 2 கிராமங்களுக்கு 18.5.2023 அன்றும், மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி கிராமங்கள...

போடி யூனியன் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டி, அணைக்கரைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை 2.5.2023 அன்று மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது. போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.11 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, சிறுபாலம், வடிகால் அமைக்கும் பணி, வலையபட்டி கிராமத்தில் இருந்து வரும் கழிவு நீரினை வடிக...

கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி இந்து எழுச்சி முன்னணியினர் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியும், வடுகபட்டி போயர் சமுதாய ஸ்ரீ பாட்டையா கோவில்  பங்காளிகளும் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் விஷ்வா பாலமுருகன், தேனி நகர தலைவர் செல்வபாண்டி,  நகர துணைத்தலைவர்கள் சிவா, நாகராஜ், நகர அமைப்பாளர் சிவராமன், நகர துணை செயலாளர்கள் விஷ்ணு, சீனிவாசன், ரெங்கராஜ், ராஜா, நாகேஷ், நகர செயலாளர் தினேஷ்குமார்,  உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் இளம்பரிதி, பெரியகுளம் ஒன்றிய தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் குமரேசன் மற்றும்  இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்களும், வடுகபட்டி ஸ்ரீ பாட்டையா கோவில் பங்காளிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீ பாட்டையா கோவில் தலைவர் திருமுருகன் அவர்கள் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், பெரியகுளம் வடுகபட்டி ஸ்ரீ பாட்டையா கோவில் தலைவராக உள்ளேன். இந்த கோயில் ஆனது வடுகபட்டி ...

நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு முதல் காரணம் மக்கள் தான்: நிறைவு விழாவில் கனிமொழி எம்.பி., பேச்சு

தூத்துக்குடி மாவட்டம், (எட்டயபுரம் சாலை) சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற நெய்தல் கலை விழாவின் நிறைவு நாளில் தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில், நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற முதல் காரணம் தூத்துக்குடி மக்கள் தான். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த கலைஞர்கள் மற்றும் உணவுக்கடை மக்களுக்கும் நன்றிகள். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஒருங்கிணைந்த மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும்,  காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி என்று பேசினார். நெய்தல் கலை விழா ஏப்ரல் 28-ந் தேதி தொடங்கி மே 1-ம் தேதி வரை 4 நாட்கள் நடந்தது. இந்த நெய்தல் கலை விழாவில் 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தது மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை காண வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் நடனமாடி அனைவரையும் கவ...

கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணி நிறைவு பாராட்டு விழாவில் கவிபேரரசு வைரமுத்து, கலெக்டர்கள் பங்கேற்பு

தேனி மாவட்டம். கெங்குவார்பட்டி பேரூராட்சிக்குட்பட்பட்ட எஸ்.கே.எம் மஹாலில், டிடி 124 கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து வந்த செயலாளரும். விருதுநகர் மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன் அவர்களின் தந்தையுமான வீ.பழனிச்சாமி அவர்களின் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா 1.5.2023 அன்று திரைப்பட பாடலாசிரியர் கவிபேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.விசாகன். அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கவிபேரரசு வைரமுத்து அவர்கள் பேசும் போது, கெங்குவார்பட்டிக்கு இது முத்திரை திருவிழாவாக. இவ்விழா அமைந்துள்ளது. இந்த மண்ணின் மைந்தனான தந்தைக்கு அவரது மகன் விழா எடுக்கிறார். தந்தை யாரென்றால் ஒரு கடன் சங்கத்தில் வேலை பார்த்து, தன் மகனை மாவட்ட கலெக்டர் ஆக்கியது, இம்மண்ணிற்கு பெருமை. இளங்கோவடிகள் சொல்கிறார் கண்ணணிக்கு பெருமை கோவலன் மனைவி என்பதனாலா,. கற்புக்கரசி என்பதனாலா, பூம்புகாரின் புத்திரி என்பதனாலா, கற்புக்கரசி பெண்களால் புகழப்பட்டவள் கண்ணகி. ஒரு பெண்னுக்கு பெரு...

தேனி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்: கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் 1.5.2023 அன்று மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கி.சிந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாதுரை,  ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அதுபோல பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் தலைமையில், துணைத்தலைவர் பிரியா, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று அரண்மனைப்...