Skip to main content

Posts

Showing posts from November, 2025

தேனியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா அன்று விழிப்புணர்வு குதிரை பேரணி

தேனி, நவ.28- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி ஏற்பாட்டில் தேனியில் முதன்முறையாக  முன்னிட்டு பொது மக்களை கவரும் வகையில் விழிப்புணர்வு குதிரை பேரணி 27.11.2025 அன்று நடைபெற்றது. இந்த பேரணியை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது வீரபாண்டி பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்த பேரணியானது முத்துதேவன்பட்டி, பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு என சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் குதிரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த குதிரை பேரணியை பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.  .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

  தேனி, நவ.28- தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா 27.11.2025 அன்று கேக் வெட்டி, காப்பக குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தேனி திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின், காப்பக நிர்வாகி பால்பாண்டி உள்பட பலர் கலந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அயலக அணி நிர்வாகிகள் செய்திருந்தனர். ........................ நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24.11.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் வேந்தர் பாலா, மாவட்ட பொருளாளர் வீரா ராமச்சந்திரா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் மற்றும் நீர் வழித்தடங்களில் தனியார் நிறுவனத்தினர் அமைத்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை அகற்ற வேண்டும்.  தேனியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  தேனி மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் விபச்சார குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்.  தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோர...

கம்பம் அருகே மணற்படுகை பகுதி முல்லை ஆற்றில் கரை உடைப்பை சரி செய்ய வேண்டும்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஐந்து மாவட்ட தலைவர் மனோகரன், கெளரவ தலைவர் சிவமணி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள மணற்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு தலைமதகு அமைத்து அங்கிருந்து உத்தமபாளையம் பரவு கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி செய்யப்படுகிறது.  அந்த தலைமதகு அமைந்த இடத்தில் தெற்குப் பக்கத்தில் முல்லைப் பெரியாற்றில் கிழக்கு கரையில் 8 மீட்டர் அகலத்திற்கு, 60 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் வாழை காய்கறிகள், நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.  இந்த சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும். தற்சமயம் அந்த ஆற்றின் கரை உடைந...

தேனி மாவட்ட கோர்ட்டில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தேனி, நவ.21- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஹோமியோபதி துறை சார்பில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் புகைப்பட கண்காட்சி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தலைமை தாங்கினார். தேனி அமர்வு நீதிபதி அனுராதா வரவேற்றார். முகாமின் போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அன்னகாமு, ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை எடுத்துக் கூறினர்.  முகாமில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் உள்பட கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர்  

தேனியில் 72-வது கூட்டுறவு வார விழா: ரூ11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் வழங்கினார்.

தேனி, நவ.20- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (20.112025) கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் தொழில்முனைவோர். பெண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து, சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. நூற்றாண்டிற்கும் மேற்பட்ட கட்டமைப்பை கொண்ட கூட்டுறவுத் துறையில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சிக்கும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மருத்தகம் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். கூட்டுறவு நிறுவனங்கள் ம...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் போராட்டம்

தேனி, நவ.19- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 18.11.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 19.11.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட பொருளாளர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற வேண்டும்.  புறஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும்.  காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர, சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்...

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, நவ.16- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி வசந்த மஹாலில் 15.11.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் வட்ட துணைத்தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தின் போது தேனி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் போது புதிய நிர்வாகிகளாக மாவட்ட  தலைவராக பிரபு, மாவட்ட செயலாளராக ராஜ்குமார், மாவட்ட பொருளாளராக குமரேசன் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் சான்றிதழையும், மாநில பொதுச்செயலாளர் குமார் பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார்.  இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ப...

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.39 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

தேனி, நவ.14- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 14.11.2025 அன்று பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 132 மாணவ மாணவியர்களுக்கு ரூ20 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணணக்குமார் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  தற்போதைய காலகட்டத்தில் கல்வி மிகமிக முக்கியமானதாக உள்ளது படிப்பில் தொடர்ச்சியாக முழு கவனம் செலுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலைய அடைய முடியும். பள்ளிகளில் மாணவர்களின் எழுத்தறிவு விகிதத்தை விட மாணவிகளின் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா மு...

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மீது அவதூறு செய்தி பரப்பிய பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி.-யிடம் சேர்மன் புகார் மனு

  தேனி, நவ.14- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் வக்கீல் மிதுன் சக்கரவர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் 11.11.2025 ஆம் தேதியன்று புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.  அந்த மனுவில் கூறப்பட்டுள்ள புகார் குறித்து பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,  அந்த புகார் மனுவில், நான் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது வரை பொதுமக்கள் நலனுக்காக பணிகள் செய்து வருகிறேன். இந்நிலையில் ஒரு வார பத்திரிக்கை செய்தியில் நான் வைக்கிறது தான் சட்டம் என் வீட்டிற்கு தான் திட்டம் மீண்டும் சர்ச்சை வளையத்தில் பி.சி.பட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி என்ற தலைப்பில் எனது புகைப்படத்தினை அச்சிட்டு பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா தெருவில் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து ரோட்டில் பாதி ஆக்கிரமிச்சிருக்காங்க. இதிலே பத்துக்கு மேலே வாடகைக்கு வீடு கட்டி விட்டு வசூல் பண்ணிக்கிட்டு இருக்காரு, அந்த வீடுகளுக்கு தெரு குழாயில் நேரடியாக இணைப்பு கொடுத்து...

தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.

தேனி, நவ.8- தேனி மாவட்டம். தேனி வட்டாரம். கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8.11.2025 அன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை 2.8.2025 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வட்டாரத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி தேனி மாவட்டத்தில் இதுவரை 13 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாமில் இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. எலும்பு மருத்துவம் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம். குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம். இயன்முறை மருத்து...

தேனியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 429 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

தேனி, நவ.8- தேனி மாவட்டம். கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் 8.11.2025 அன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங்429 பேர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில்,  பிறரை சார்ந்து இல்லாமல் சுயமரியாதையோடு வாழ்வதற்கும். படித்த வேலைக்கு செல்வது அவசியமாகும். தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைத்தேடும் இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ள முடியும். தற்பொழுது வேலைக்கு செல்வதில் போட்டிகள் அதிகம் உள்ளது. கல்வியை முற...