Skip to main content

Posts

Showing posts from February, 2025

உத்தமபாளையம் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா

தேனி, பிப்.28 - தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஸ்ரீ அங்காளஈஸ்வரி மற்றும்ஸ்ரீ முத்துக்கருப்பண சுவாமி கோவிலில் சிவராத்திரி விழா 2 நாட்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் குழு சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீ முத்துக்கருப்பண சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிப்.26 புதன்கிழமை அன்று ஆலய வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ வீரபத்திரருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்லயம் படையல் வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குலதெய்வம் வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிப்.27 வியாழக்கிழமை அன்று 7 மணிக்கு சிவனடியார்கள் கலந்து கொண்ட பாரம்பரிய சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு ஸ்ரீ அங்காளஈஸ்வரி கோவிலில் அம்மனுக்கும் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் பல்லயம் பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ அங்காளம்மன்,ஸ்ரீ வீரபத்திர சுவாமி, ஸ்ரீ பாலகுருநாதர் உள்ளிட்ட 21 தெய்வங்களும். பெட்டியுடனும், மேளதாளங்களுடனும் திருவீதி உல...

தேனியில் கிராம காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு ஆய்வு கூட்டம்

தேனி, பிப்.28- தேனியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டல எண் 8-ன் சார்பில் திண்டுக்கல், கரூர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளின் கிராம காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு ஆய்வு கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 28.2.2025 அன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநில மேலாண்மை துணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, தேனி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பாண்டியன், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பேங்க் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூடலூர் முருகேசன், திண்டுக்கல் மாநகர தலைவர் துரை மணிகண்டன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மச்சக்காளை, நாகராஜ், தேனி மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல், மாவட்ட செயலாளர் அபுதாகிர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சம்சுதீன், சித்திக் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வ...

மதுரை குமாரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மதுரை, பிப்.27- மதுரையில் அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வரும், கழக முன்னாள் பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குமாரத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு தையல் மிஷின் மற்றும் உதவிகளை வழங்கினார்.  இதனைத்தொடர்ந்து  கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரும் 2026-ம்  ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அம்மா ஆட்சியை கழக பொதுசெயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நல்லாட்சி தருவோம் என்றார். இந்த கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் சரவண பெருமாள், தலைமை கழக பேச்சாளர் துகிலி. நல்லுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உசிலம்பட்டி மகேந்திரன், தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், சதன்பிரபாகரன், அம்மா பேரவை துணை செயலாளர் ராஜேஸ் கண்ணா, மாவட்...

தேனியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்துரையாடல் கூட்டம்: ஆணைய தலைவர் சொ.ஜோ அருண் தலைமையில் நடந்தது

  தேனி, பிப்.25-  தேனி  மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (25.02.2025) சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த  கலந்துரையாடல் கூட்டம் மாநில சிறுபான்மையினர்  ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் தலைமையில், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வா.சம்பத், தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் மற்றும் மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள்  நாகூர் எ.எச்.நஜ்முதீன், பிரவீன்குமார் டாடியார், ராஜேந்திர பிரசாத், எம்.ரமீட்கபூர், ஜெ.முகமது ரபி, எஸ்.வசந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மக்களுக்கு தேவையான திட்டங்களையும்,  அவர்களின்  உரிமைகள் மற்றும் வாழ்வியல் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதல...

தேனியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தேனி பிப்.25- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் 24.2.2025 அன்று நடைபெற்றது. வளைகாப்பு என்பது குழந்தையின் பிறப்பை கொண்டாடுவதற்காகவும், கர்ப்பிணி தாய்மார்களின் மனரீதியான மகிழ்ச்சிக்கும் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்திற்காகவும் நடத்தப்படும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட்டாரம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் கருவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை பிறந்தது மு...

தேனி மாவட்டத்தில் 18 முதல்வர் மருத்தகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தேனி, பிப்.25 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 24.2.2025 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து கூட்டுறவுத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி-அல்லிநகரம் நகராட்சி சமதர்மபுரத்தில் உள்ள முதல்வர் மருத்தகம் திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மருந்தகத்தை பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மருந்துகளையும் (Generic Medicines மற்றும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும். தொழில் முனைவோரை உருவாக்குவதற்காகவும் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் அறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்று தேனி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் 10 முதல்வர் மருந்தகங்களும் கூட்டுறவுத்துறையின் முலம் 8 முதல்வர் மருந்தகங்களும் மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்க...

மதுரை-சோழவந்தான் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மதுரை, பிப்.24- மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளர் ஜெ. ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழாவை அதிமுக-வினர் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் வாடிப்பட்டி ஒன்றிய கிராமங்களிலும்,சோழவந்தான் பேரூர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில், பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலையில் ஜெயலலிதா உருவபடத்தை மலர்களால் அலங்கரித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயகுமார், மு.சேர்மன் பாண்டியம்மாள் ராமு, ரொட்டி கடை முருகேசன், வார்டு செயலர் தண்டபாணி, மணிகண்டன் ராமு , சோலை சிவா, பிரேம், பெட்ரோல் பங்க் சசிகுமார், சசி, சாக்கு முருகேசன், கென்னடி,மெடிக்கல் சங்கர், மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். சீனிவாசன், உதவி ஆசிரியர் ...........................

தேனியில் ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனை கூட்டம்

தேனி, பிப்.23- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனை கூட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள கண்ணம்மா ஹோட்டலில் 23.2.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி மாநில தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் களஞ்சியம், டி.என்.எஸ்.டி.சி மாநில பொது செயலாளர் ஜீவன் மூர்த்தி, துப்புரவு மாநில செயலாளர் அருட்ஜோதி, போடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது ஐ.என்.டி.யு.சி தேனி மாவட்ட தலைவராக முன்னாள் போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் டி.என்.எஸ்.டி.சி. மண்டல அமைப்பு செயலாளர் அனந்த நாராயணன் மற்றும் ஐ.என்.டி.யு.சி 14 துணை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் உடல், உழைப்பு தொழிலாளர்களுக்கு உயிர் பலி விபத்து ஏற்படும் போது அரசு வழங்குகின்ற நிவாரணத்தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.  தேனி மாவட்டத்தில் நூல் ம...

போடி ZKM பள்ளி மாணவ, மாணவிகள் வேதபுரி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு தரிசனம்

தேனி பிப்.21- தேனி மாவட்டம், போடி ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (ஜ.கா.நி.) மாணவ, மாணவியர்கள் தேனி-அரண்மனைப்புதூர் அருகே உள்ள வேதபுரீ சித்பவாநந்த ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்கு சிறப்பு தரிசனத்திற்கு சென்றனர். இந்தப் தரிசன பயணத்தில் 180 மாணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர். ஆசிரம மேனேஜர் சுரேஷ் சிறப்பு தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கோவில் தலைமை குருக்கள்  இரமேஷ் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாட்டு முறைகள், மனனம் செய்வது எப்படி என்பதையும், தேர்வுகளில் வெற்றி பெற உதவும் மந்திரங்களையும் விரிவாக விளக்கி கூறினார். இந்த அனுபவம், மாணவ, மாணவியர்களின் ஆன்மிக நம்பிக்கையை மேம்படுத்துவதுடன், கல்வியில் மேலும் சிறந்து விளங்கும் உறுதியையும் அளித்தது. இந்நிகழ்வில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, தேனி நகர தலைவர் சிவராம், நகர அமைப்பாளர் கனகுபாண்டி, நகர செயலாளர் அழகுபாண்டி, நகர துணைச் செயலாளர்கள் ஏழுமலையான் சுரேஷ் மற்றும் ராம...

தேனி மாவட்ட கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.21- தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோளின் படி தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் செல்வன், கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், வடிவேலன், மாநில துணைச்செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேனி வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் மல்லீஸ்வரன், மூத்த வக்கீல்கள் ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன் மற்றும் போடி கனி, வீரசிவா, கார்த்திக் உள்பட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது சேலம் வழக்கறிஞர்கள் தண்டபாணி, கவின் ஆகியோர் சேலம் நீதிமன்ற வளாகத்திலேயே கொலைவெறி தாக்குதலுடன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், வக்கீல்களுக்கு எதிராக வழக்கறிஞர் சட்ட திருத்தம் மசோதா 2025-ஐ மத்...