தேனி மாவட்டத்தில் நடந்த 77-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
தேனி, ஜன.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.1.2026) நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் 80 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயங்களையும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றி 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணிபுரிந்த 6 மருத்துவர்களுக்கும். 3 சிறந்த சமூகநீதி விடுதிக் காப்பாளர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 202...