Skip to main content

Posts

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் SIR: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேட்டி

தேனி, நவ.7- தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா 7/11/2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியல் S.I.R திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIR-யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாக பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 3D பிரிண்டிங் மையம் திறப்பு விழா

தேனி, நவ.6- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறையில் 3D பிரிண்டிங் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் முனைவர்.C.மதளை சுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம். இணைச்செயலாளர் T.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பொறியியல் துறை சார்ந்த பாகங்களின் வடிவமைப்புகளை கணினி உதவியுடன் 3D மாடல்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தோடு துவக்கப்பட்ட 3D பிரிண்டிங் தொழில்நுட்ப மையத்தை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு 3D பிரிண்டிங் (முப்பரிமாண அச்சிடல்) மையத்தை திறந்து வைத்தனர். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணை செயலாளர்கள், முத...

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தேனி, நவ.1- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 1.11.2025 அன்று நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் தலைமையில் நடைபெற்றது.  தேனி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகையா, அரண்மனைப்புதூர் ஊராட்சி செயலாளர் ரதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கோவிந்தநகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி...

தேனியில், ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  தேனி, அக்.30-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 29.10.2025 அன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சுந்தரபாண்டி முன்னிலை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுருளி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ரதவேல், பாண்டி, முத்துக்குமார், கணபதி உள்பட ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தினை ரூ.10 ஆயிரமாக  உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும்.  ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இண...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: குறவர் சமூக மக்களுக்காக வன வேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.27- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வன வேங்கைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் தேனி மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலையில் குறவர் சமூக மக்கள் 27.10.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள்  எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், இந்து (SC) குறவர் சமூக மக்கள் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடவீர நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  அம்மாபட்டி கிராமம் இளவெயினி நகர் பகுதியில் மற்றும் தேனி மாவட்ட முழுவதும் வசித்து வருகிறோம்.  மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மேற்கண்ட இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கக்கூடிய குறவர் சமூக மக்களுக்கு அன்றைய மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட பட்டா வழங்கிய இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக தனி தரைதளம் 175 குடியிப்புகள் கட்டி முடிக்கப்பட்டு குறவர் (SC) 88 குடும்ப...

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வார்டு சபா சிறப்பு கூட்டம்

தேனி, அக்.27- தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு பகுதியில் வார்டு சபா சிறப்பு கூட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் 27.10.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுன்சிலர் கடவுள் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கோபால் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள், வார்டு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். கருவேல்நாயக்கன்பட்டிக்கு வடக்கு பகுதியில் இருந்து  வரும் மெயின் அணுகு சாலையில் உள்ள சாக்கடை பாலத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனால் சாலையில் உள்ள சாக்கடை பாலத்தை 25 அடி தூரம் வடக்கு பகுதிக்கு தள்ளி அமைக்க வேண்டும். அதுபோல கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை அருகே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். மந்தையம்மன் கோவிலில் இருந்து மேற்கு தெரு செல்லும் சிமெண்ட் சாலையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை உடனடியாக மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்பட 12 அடிப்படை கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்ற...

தேனி பஸ் நிலையத்தில் தவித்த ஆதரவற்ற மூதாட்டிகளை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த மருந்தாளுநர்

தேனி, அக்.25- தேனி பஸ் நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க இரு மூதாட்டிகள் ஆதரவின்றி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் போலீசார் உதவியுடன் அவர்களை மீட்டார். அதன்பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் பெயர் கனகா 70 மற்றும் வசந்தா 68 என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மதுரை மாவட்டத்தை சேர்ந்த அவர்களை அவர்களது குடும்பத்தினர்களே தேனி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து ஆதரவின்றி தவித்த மூதாட்டிகளுக்கு உணவு கொடுத்து மாற்று உடை அணிவித்து அவர்களை தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியில்  உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார். இதுகுறித்து ரஞ்சித்குமார் கூறுகையில், வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து தேனி மாவட்டத்தில் தவிக்க விட்டு செல்லும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது. மனிதநேயத்துடன் முதியோர்களை பாதுகாத்து பராமரிக்க முன்வர வேண்டும். வெளியூர் மற்றும் கேரளாவில் இருந்து முதியவர்களை தேனி மாவட்டத்தில் விட்டு செல்பவர்களை சமூக நலத்துறையினர் கண்...

தேனியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தேனி, அக்.12- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.   ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.  இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர்...

தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்றார்

தேனி, அக்.11- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற்றது. இதில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கிராம சபை கூட்டத்தின் மூலம், கிராமப்புறத்திற்கு தேவையான குடிநீர், மயான வசதி உள்ளிட்ட பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கைக...

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...