Skip to main content

Posts

தேனி வாரச்சந்தையில் நகராட்சியின் சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கும் திட்டம்: தடுத்து நிறுத்த கோரி இந்து எழுச்சி முன்னணியினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஜன.13- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்து எழுச்சி முன்னணியினர்  தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் தலைமை எழுத்தர் தியாகராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை 13.1.2025 அன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், தேனி வட்டம், தேனி நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் நிலத்தில், தேனி அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தற்போது, அந்த சந்தை பகுதியில் இயங்கி வந்த தினசரி காய்கறி கடைகள் இடித்து, புதிய கட்டிடங்கள்  கட்டப்படும் பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், அந்த கடைகளுக்கு மாற்றாக, கோவில் நிலத்தில் தற்காலிகமாக கடைகள் அமைக்க நகராட்சி முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. மேற்படி கோவில் நிலத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டால்,  பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சிரமம் ஏற்படும்,  கோவில் நிலம...

தேனியில் ஒக்கலிகர் நலச்சங்கம் சார்பில் கல்வி பரிசளிப்பு விழா

தேனி, ஜன.13- தேனி ஒக்கலிகர் (காப்பு) நலச்சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, 19-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு என முப்பெரும் விழா 12.1.2025 அன்று தேனியில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜனகரன் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்த அனைவரையும் மாநில பொருளாளர், தேனி ஒக்கலிகர் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் வரவேற்றார். விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ரத்தினசபாபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். விழாவில் தேனி ஒக்கலிகர் (காப்பு) நலச்சங்க தலைவர் மும்மூர்த்தி, செயலாளர் ராஜவேல், பொருளாளர் உடையாளி, தேனி ஒக்கலிகர் கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை செயலாளர் அசோகன், பொருளாளர் மாதவன் மற்றும்  தேனி ஒக்கலிகர் காமதேனு குடும்ப நல நிதித்திட்ட தலைவர் ராஜன், செயலாளர் ராஜு, பொருளாளர் விவேகானந்தன் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின...

தேனி அருகே 1,000 பேர் பங்கேற்ற சிலம்பம் போட்டி: ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

தேனி, ஜன.12- தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் எஸ்.ஜி.கே சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை முயற்சிக்காக சிலம்பம் போட்டி 12.1.2025 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிலம்ப பயிற்சி மையத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பங்கேற்றனர்.  இதில் 3 வயது முதல் 21 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள் இந்த சிலம்பம் சாதனை போட்டியில் பங்கு பெற்றனர் கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்ற தொடங்கினர். ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும்  வகையில் நடைபெற்ற இந்த போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இதன் பின்னர் இந்த நிகழ்வு ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், உலக சாதனை போட்டியை நடத்திய எஸ்.ஜி.கே சிலம்ப கலைக்கூடம் நிறுவன சண்முகி ரஞ்சித் மற்றும் அவரின்...

தேனியில் திமுக அயலக அணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருந்து உபசரிப்பு விழா

தேனி, ஜன.12- தேனி வடக்கு மாவட்ட தி.மு.க அயலக அணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் அறுசுவை விருந்து உபசரிப்பு விழா தேனி வசந்த மஹாலில் 11.1.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு திமுக அயலக அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் ராஜன் தலைமை தாங்கினார்.  தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி பேசி அறுசுவை உணவு உபசரிப்பை துவக்கி வைத்து  அவர்களோடு அமர்ந்து அறுசுவை விருந்தில் உணவருந்தினார்  இந்த நிகழ்ச்சியில் தேனி திமுக வடக்கு மாவட்ட அவை தலைவர் செல்லப்பாண்டி, தேனி நகர திமுக  செயலாளர் நாராயண பாண்டியன், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்  மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் இராஜராஜேஸ்வரி சங்கர், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி உள்பட திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தேனி வடக்கு மாவட்ட அயலக அணி நிர்வாகிகள் ஸ்டாலின் ராஜ்குமார், ஆறுமுகம், கண்ணன், அழகு முருகன், பொன் பாண...

தேனி நாடார் சரசுவதி கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தேனி, ஜன.12- தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா 11.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உப தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்துரை வழங்க கல்லூரி மாணவிகள் சார்பில் ஜாதி, மத, இன கலாச்சார பேதமின்றி மாவிளை தோரணங்கள் அலங்கரிக்க புத்தரிசியிட்டு புதுப்பானையில்  சமத்துவ பொங்கல் வைத்தனர். விழாவின்போது மாணவிகளுக்கு இடையே கோலப்போட்டி, கபடி, ரொட்டி சாப்பிடுவது, தண்ணீர் நிரப்புதல், எலுமிச்சை மற்றும் ஸ்பூன், பலூன் உடைத்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற போட்டிகளும்,  கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே இசை நாற்காலி, கயிறு  இழுத்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி அகாடமிக் டீன் கோமதி, கல்ல...

தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா

தேனி, ஜன.12- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா 11.1.2025  அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை  இந்த நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உப தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார்  கல்வியியல் கல்லூரி செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது கல்வியியல் கல்லூரி பி.எட்., எம்.எட்., மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதற்கிடையே மாணவிகளுக்கு இடையே மற்றும் பேராசிரியர்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை உறவின்முறை நிர்வாகிகள் வழங்கினர். முடிவில் பொருளறிவியல...

போடி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் புனரமைப்பு பணிகளுக்காக பாலாலயம்: வானில் வட்டமிட்டு ஆசீர்வதித்த கருட பகவான்

தேனி, ஜன.12- தேனி மாவட்டம், போடி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் புனரமைப்பு பணிகளுக்காக பாலாலயம் செய்த போது வானில் வட்டமிட்டு கருட பகவான் ஆசிர்வதித்தது. போடி பரமசிவன் மலைக்கோவில் கிரிவலப் பாதையில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது  இந்த கோவிலை கேரளா மாநிலத்தை சேர்ந்த முனீஸ் அபிஜித் நம்பூதிரி கட்டி பராமரித்து பாதுகாத்து வருகின்றார் இந்த நிலையில் இந்த கோவில் புனரமைப்புப் பணிகளை கடந்தாண்டு தொடங்கினார்  அந்த வகையில் நேற்று முறைப்படி கருவறையில் இருக்கும் விக்கிரகத்தை எடுத்து மற்றொரு இடத்திற்கு புனர்நிர்மாணம் செய்யும் சடங்கு சகல பரிகாரங்களுடன் முறைப்படி செய்யப்பட்டது.  அப்போது கோவிலின் கோபுர கலசத்தை அகற்றும் போது வானில் கருட பகவான் வட்டமிட்டு ஆசீர்வாதம் செய்தது. நீண்ட நேரமாக கருட பகவான் வானில் வட்டமிட்டு ஆசீர்வதித்த காட்சிகள் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதும். அனைவரும் கைகூப்பி வணங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புனரமைப்பு குறித்து கோவில் நிர்வாகி தெரிவிக்கையில், க...

தேனி மாவட்ட கோர்ட்டில் ஜல்லிக்கட்டு காளையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

தேனி, ஜன.10- தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா 10.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.. குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சரவணன், பி.சி.ஆர் கோர்ட்டு நீதிபதி அனுராதா, போக்சோ கோர்ட்டு நீதிபதி கணேசன், கூடுதல் அமர்வு நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   விழாவில் வக்கீல் சங்க நிர்வாகிகள் MKM.முத்துராமலிங்கம், செல்வன் பாண்டி மணி, ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்கள் ஜெயபாரதி, காண்டீபன், மல்லீஸ்வரன் சந்தானகிருஷ்ணன், செல்வகுமார் உள்பட வக்கீல் சங்க  நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொங்கல் விழா கொண்டாட நீதிபதிகள் டிரம்ஸ் முழக்கத்துடன் அழைத்து வரப்பட்டு ஜல்லிக்கட்டு காளை மற்றும் சிறுவர்கள் சிலம்பம் விளையாட்டு வரவேற்பு அளித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.. இதனைத் தொடர்ந்து பொங்கல் விழா பூஜைகளும், வக்கீல்களுக்கு இடையே பானை உடைத்தல், இசை நாற்காலி, செங்கல் பள...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்: மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், முன்னிலையில் 10.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். அனைத்துத் தொழில்களுக்கும், அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், பம்பரம் சுற்றுதல், கோலி விளையாடுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பணியாளர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பாட்டுப்போட்டி, பலகுரல் போட்டி (Mimicry) உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெ...

மதுரையில், பண்டரிபுரம் பாண்டுரங்கனை 200 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பூஜிக்கும் 22-ம்ஆண்டு பாகவத நாம சங்கீர்த்தன மேளா: விழாவில் பங்கேற்க சுவாமி ராமானந்த சரஸ்வதி அழைப்பு விடுத்துள்ளார்

மதுரை, ஜன.10- மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி சாலையில் உள்ள சுவாமி ராமானந்தா சரஸ்வதி, ஸ்ரீசங்கர ராஜராஜேஸ்வரி பீடம் சார்பில் 22-ம் ஆண்டு பாகவத சங்கீர்த்தன மேளா,வரும், மே 28-ம் தேதி முதல் ஜூன் 1-ம்தேதி வரை, 5 நாட்கள் மதுரையில் பண்டரிபுரம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பாண்டுரங்கனின் நாம சங்கீர்த்தன் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள், இதற்கான விழா ஏற்பாடுகளை செய்து வரும், மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தின்  ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியாதவது, சென்னை பகவந் நாம பிரச்சார மண்டலி சபை , ஒவ்வொரு வருடமும் அயோத்தி,  பத்ரிநாத் துவாரகா, பத்ராஜலம், உடுப்பி, இராமேஸ்வரம், காசி உட்பட பல்வேறு புண்ணிய தலத்தில் பாகவத நாம சங்கீர்த்தன மேளாவை நடத்தி பகவான் பாண்டுரங்கனின் சங்கீர்த்தனை நடத்தி  நாடும் மக்களும் எல்லா நன்மையும் நோயின்றி வாழ வழிபாடு நடத்துவது வழக்கம் இது 20 வருடத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது. இதேபோன்று இந்த ஆண்டு வருகிற மே 28-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி என 5 நாட்கள் மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ந...