Skip to main content

Posts

Showing posts from April, 2023

கலைஞர் டி.வி-யில் எனக்கு பங்கு இல்லை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி., நோட்டீஸ்

சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி.-யுமான கனிமொழி கருணாநிதி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி  சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில்,    “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14-ம் தேதி உங்கள் கட்சி தலைமையகத்தில் டி.எம்.கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள். அந்த அவதூறு காணொலியில் எனது கட்சிக்காரர் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி கருணாநிதி பெயரை குறிப்பிட்டு ‘அபிடவிட் படியான சொத்து மதிப்பு 30.33 கோடி ரூபாய்  மற்றும் கலைஞர் டிவி 800 கோடி ரூபாய் மொத்த மதிப்பு 830.33 கோடி’’  என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது.  இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல, அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது மற்றும்  ஆவணங்களில்- பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது.   கடந்த 10.2.2023 முதல் என் கட்சிக்காரர் கலைஞர் ட...

தேனி மாவட்டம், குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் கோவில் சுரபி நதி சுத்தம் செய்யும் பணி: இந்து எழுச்சி முன்னணியினர் முயற்சி

தேனி மாவட்டம் குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் சுரபி நதியில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக இந்து எழுச்சி முன்னணிக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர செயலாளர் தினேஷ்குமார், நகர துணை செயலாளர்  ரெங்கராஜ், பெரியகுளம் நகரத் தலைவர் பட்டர் கோகுல் ஆகியோர்கள் புறப்பட்டு சென்று கோவில் வளாகத்தை சுற்றி பார்த்து சுரபி நதியை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட செயலாளர்  இராமமூர்த்தி சுரபி நதியில் இறங்கி சாக்கடை நீர் கலந்து வருகிறதா? கலங்கிய நீரில் துர்நாற்றம் வீசுகிறதா? என்று சோதனை செய்ய நதியில் இறங்கி பார்த்தார்.  நதியில் சாக்கடை நீர் கலக்கவில்லை மாறாக தேங்கி இருக்கும் நீர் மற்றும் துணிகள் அகற்றப்படாமல் இருக்கும் காரணத்தினால்தான் துர்நாற்றம் வீசுகிறது என்ற செய்தியை கூறினார். பொறுப்பாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே சாமி தரிசனம் செய்ய வந்த தொழில் அதிபர் சரவணகுமார்  அவர்கள் எங்களிடம் விஷயங்களை கேட்டறிந்து குச்...

ஆண்டிபட்டி பேரூராட்சியில் நடந்து முடிந்த டென்டரை ரத்து செய்வது குறித்து காரசார விவாதம்

 தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் சந்திரகலா பொன்னுத்துரை தலைமை தாங்கினார் . துணை சேர்மன் ஜோதி சேகர் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் வரவு, செலவு, பிறப்பு, இறப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து வாசித்தார்.  இதன் பின்னர் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. கடந்த 19-ம் தேதி அன்று ஆண்டிபட்டி  நெடுஞ்சாலை தலைசுமை ஆயம் வசூல் குறித்த ஏலம் விடப்பட்டது .இதில் 8 பேர் பதிவு செய்திருந்தனர். ஏலத்தில் 4 பேர் பங்கு கொண்டனர். இதில் அரசு தொகையாக ரூபாய் 2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 4-வது வார்டை சேர்ந்த துரைச்சாமி மகன் நாகராஜ்  ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டார். அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால், அவருக்கே டெண்டர் விடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் வருமான வரி, ஜி.எஸ்.டி உள்பட ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 140 பேரூராட்சியில் வரவு வைத்தார். இந்த ஏலத்திற்கு அப்போது இருந்த செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தி...

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (27.04.2023) மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி, பணிதளத்தில் குடிநீர் வசதி மற்றும் முதலுதவி பெட்டி வசதிகள், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.9.85 அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டுமானப்பணி, அறிஞர் அண்ணா துவக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கன்வாடி மையத்தின் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஓடை பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை வருவாய்த்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு. ஓடை பகுதிகளை...

ட்விட்டர் கணக்கில் கிரே டிக் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவரானார் கனிமொழி கருணாநிதி எம்.பி.,

ட்விட்டர் நிறுவனம் தலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்திருக்கும். சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீலம் நிறம் நிறுபிக்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி அவர்களின் ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறவன குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநிதி அவர்கள் பதிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                       G.சிவக்குமார்,...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது சுகாதார பணிகளை மேற்கொள்ள ஊராட்சிகளுக்கு டிராக்டர் வாகனம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24.4.2023 அன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா கோருதல், பட்டா மாறுதல். கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல். மற்றும் காவல்துறை தொடர்பான மனுக்கள் என 267 கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் அவர்கள் பெற்று. குறைகளை கேட்டறிந்தார். அப்போது தகுதி வாய்ந்த மனுக்கள் மீது எந்தவித காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையின் சார்பில், நமக்கு நாமே திட்ட...

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு அடிப்படை வசதிகள் தேவை : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி 23.4.2023 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் இராமராஜ் வழிகாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது வருகின்ற மே மாதம் இந்து எழுச்சி முன்னணியின் ஆண்டு திட்டமான வருடாந்திர பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவது என்றும், தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி, பெண்களுக்கு துணி மாற்றும் அறை வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை வீரபாண்டி பேரூராட்சி  நிர்வாகம் சிறப்பாக செய்து தர வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது என்பன உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

மேகமலை பகுதியில் தரமான காபி ஏலம் மிளகு நாற்றுகள் கொண்டு செல்ல வனத்துறை தடையால் பொருளாதார இழப்பு

 தேனி மாவட்டம், தேனி - வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கம்பெனி அலுவலக வளாகத்தில் மேகமலை பிளான்டர்ஸ் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க முதல் பொதுக்குழு கூட்டம் தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் சிதம்பர கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- காபி, ஏலம், மிளகு நாற்றுகளை அரசு நாற்று பண்ணைகளில் இருந்து எடுத்து வருவதற்கு வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து விடுகின்றனர். இதனால் தரமான காபி, ஏலக்காய், மிளகு உற்பத்தி செய்வதை வனத்துறையினர்  தடுப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே சோதனை சாவடியில் விவசாய பொருட்கள் எடுத்து வரும் வாகனத்தை அனுமதிக்க வேண்டும்.  எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு மற்றும் விஷ பூச்சி கடித்தால் அவர்களை வாகனத்தில் எடுத்து செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை, இதனால் நாங்கள் டோலி மூலம் தூக்கி சென்று  சிகிச்சை அளிக்க முயற்சிக்கிறோம். இதுபோன்ற சம்...

தேனியில் உலக புத்தக தின விழா

 தேனி மாவட்ட மைய நூலக வளாகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கி நூலக நண்பர்கள் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் முத்துக்குமரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலகர் வாசகர் வட்ட பொருளாளர் நாணயம் சிதம்பரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் 3-ம் நிலை நூலகர் மாலதி நன்றி கூறினார்.

தேனியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் - சிறப்பு தொழுகை

 தேனி மாவட்டத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேனி பழைய பஸ் நிலையம் அருகே கம்பம் சாலையில்  உள்ள அல்லிநகரம் தேனி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மற்றும் மல்கர் பாவா தர்காவில் தலைவர் மல்கர் ஒலி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜாகிர் உசேன், செயலாளர் ஜியாவுதீன், இணைச்செயலாளர் அப்துல் ஹக்கீம், துணைச்செயலாளர் முகமது அனிபா, பொருளாளர் ரபீக் ராஜா மற்றும் நிர்வாகிகள் உள்பட இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். முன்னதாக அல்லிநகரத்தில் இருந்து தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக சென்றனர். இதேபோன்று தேனி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சுப்பன் தெரு புதுப்பள்ளி வாசலில் ஜமாத் தலைவர் சர்புதீன் தலைமையில் ஏராளமானோர் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் இருந்து புது பள்ளிவாசல் வரை ஊர்வலமாக சென்றனர்.