Skip to main content

Posts

Showing posts from July, 2025

தேனி மாவட்ட கலெக்டரிடம் பாரம்பரிய முறையில் கோரிக்கை மனு வழங்கி, தேனி நகரை நேரில் பார்வையிட அழைக்கும் முயற்சிக்கு தடை: இந்து எழுச்சி முன்னணி கண்டனம்

தேனி, ஜூலை.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய லோகநாதன் அவர்களின் தலைமையில், நகர மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து, பாரம்பரிய முறையிலான "வெற்றிலை–பாக்கு வைக்க மாவட்ட கலெக்டர்-ஐ அழைக்கும்" நெறிமுறைப்படி, தேனி நகரின் சுகாதார சீர்கேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் நேரில் சந்தித்து மனு வழங்கும் நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் காவல்துறையினருக்கு சென்றவுடன், காவல் ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் ராமலட்சுமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், "வெற்றிலை–பாக்கு வைக்கும் செயல், உரிமை எடுத்தலாகப் பொருள்படும்; எனவே இதற்கு அனுமதி வழங்க இயலாது" எனத் தடை விதித்தனர். இதற்கு பதிலளித்த இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், “நாங்கள் எவ்வித ஆர்ப்பாட்டம் அல்லது சட்டவிரோத செயல்களும் மேற்கொள்வதற்காக அல்ல; மாறாக, பாரம்பரிய முறையில் மாவட்ட கலெக்டரை அழைத்து, தேனி நகரில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து நேரில் பார்வையிடச் செய்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையாளர...

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

தேனி, ஜூலை.1- தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வருபவர் ஏகராஜா. இவர் பொம்மையகவுன்டன்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் இதற்கு முன்பு வேலை பார்த்த இடங்கள் மற்றும் தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேலை செய்வதற்கிடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக  சென்னையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் கடந்த மாதம் 26-ம் தேதி  வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அதனடிப்படையில் தற்போது பொம்மையகவுண்டன்பட்டி யில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ஏகராஜா தற்போது  சென்னையில் இருக்கும் நிலையில் நகராட்சி ஊழியர்களை வரவழைத்து அவரது வீட்டை திறந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ........................... பாண்டியன், உதவி ஆசிரியர்