தேனி மாவட்ட கலெக்டரிடம் பாரம்பரிய முறையில் கோரிக்கை மனு வழங்கி, தேனி நகரை நேரில் பார்வையிட அழைக்கும் முயற்சிக்கு தடை: இந்து எழுச்சி முன்னணி கண்டனம்
தேனி, ஜூலை.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய லோகநாதன் அவர்களின் தலைமையில், நகர மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து, பாரம்பரிய முறையிலான "வெற்றிலை–பாக்கு வைக்க மாவட்ட கலெக்டர்-ஐ அழைக்கும்" நெறிமுறைப்படி, தேனி நகரின் சுகாதார சீர்கேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் நேரில் சந்தித்து மனு வழங்கும் நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தகவல் காவல்துறையினருக்கு சென்றவுடன், காவல் ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் ராமலட்சுமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், "வெற்றிலை–பாக்கு வைக்கும் செயல், உரிமை எடுத்தலாகப் பொருள்படும்; எனவே இதற்கு அனுமதி வழங்க இயலாது" எனத் தடை விதித்தனர். இதற்கு பதிலளித்த இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், “நாங்கள் எவ்வித ஆர்ப்பாட்டம் அல்லது சட்டவிரோத செயல்களும் மேற்கொள்வதற்காக அல்ல; மாறாக, பாரம்பரிய முறையில் மாவட்ட கலெக்டரை அழைத்து, தேனி நகரில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து நேரில் பார்வையிடச் செய்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையாளர...