Skip to main content

Posts

Showing posts from July, 2025

ஹைவேவிஸ் பேரூராட்சியில், தலைவர் பதவிக்கு முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: 7 கவுன்சிலர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.29- தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் 15-வது வார்டு கவுன்சிலர்கள் பதவி உள்ளன. இதிலிருந்து தலைவர் பதவி தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் தலைவராக இருந்தவர் இறப்பின் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவி காலியாகி இருந்து வருகிறது.  இந்த பேரூராட்சி தலைவர் பதவியை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்களிடம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 15-வது வார்டு கவுன்சிலர் ஹேமா தலைமையில் 7 கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தேர்தல் அறிவிப்பு கடிதத்தை எங்களிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் கடந்த 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் 10.30 மணிக்கு ஹைவேவிஸ் பேரூர...

கம்பம் அருகே: சுருளிதீர்த்தத்தில் நெகிழி விழிப்புணர்வு.

தேனி, ஜூலை 28- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிதீர்த்தத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் நெகிழி விழிப்புணர்வு நடைபெற்றது.  இதில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அதற்கான உணவு படையல்கள், பூத நாராயணன் கோயில் சுற்றிலும், ஆற்றங்கரையிலும், பிளாஸ்டிக் மற்றும் ஆடைகளை விட்டு சென்றது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் மற்றும் வனவிலங்குகளுக்கும் வரக்கூடிய பக்தர்களுக்கு நோய் தொற்று உண்டாகக்கூடிய சூழலை ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் வனத்துறை, அன்பு அறம் செய்ய அறக்கட்டளை, பாரஸ்ட் வெல்பேர் தொண்டு நிறுவனம், என்.எஸ். எஸ். அலோசியஸ் பள்ளி மாணவர்கள் முயற்சியில் ஆன்மீகத்தலமான சுருளிதீர்த்தம் பகுதியை தூய்மை பகுதியாக மாற்றப்பட்டது. இதனால் ஆன்மீக தளத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் பாராட்டி சென்றனர். நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வாக கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி, அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி சுருளிப்பட்டி அன்பு ராஜா, வனவர் ஜெயகணேஷ், சதீஷ் வனத்தையும்,ஆன்மீகத் தளத்தையும் சுத்தம் செய்வதன் நன்மைகளையும், பிளாஸ்டிக் பைக...

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500 சிலைகள் வைத்து வழிபாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.27 - தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தேனி வசந்த மஹாலில் 27.7.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மாய லோகநாதன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி கலந்து கொண்டு இந்து எழுச்சி முன்னணி இயக்கம் தொடங்கப்பட்ட விதம், கடந்து வந்த பாதைகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கமிட்டி  பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் விழாவில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி நன்றி கூறினார்.  ...

மலை கிராம குழந்தைகள் 31 பேரை ஜனாதிபதி மாளிகைக்கு பெற்றோருடன் அழைத்து செல்வேன்: தேனியில் நடந்த விழாவில் தங்க தமிழ்செல்வன் எம்.பி., அறிவிப்பு

தேனி, ஜூலை.26- தேனி மாவட்ட ஆருடெக்ஸ் சொசைட்டி மற்றும் சென்னை நிழற்குடை பவுண்டேஷன் சார்பில் வாங்க படிக்கலாம் என்ற தலைப்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் பாராட்டு விழா தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள சுந்தரம் மஹாலில் 26.7.2025 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு வந்த அனைவரையும் ஆருடெக்ஸ் சொசைட்டி இயக்குனர் ராஜா வரவேற்றார்.  தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர்.விஆர். ராஜன், நிழற்குடை பவுண்டேஷன் அரிசித்ரா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் போது நிழற்குடை பவுண்டேஷன் திட்டங்கள் குறித்து பவுண்டேஷன் சேர்மன் பிரசன்னா ராமசாமி விளக்கி பேசினார். விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசி பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சாதனைப்படைத்த குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். முன்னதாக விழாவின் போது தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின்...

கம்பம் அருகே: மகளிர் குழுவினரை கல்குவாரிக்குள் நுழையவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, தேனி எஸ்.பி.-யிடம் கோரிக்கை மனு

  தேனி, ஜூலை.22- தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் வ.உ.சி தெருவை சேர்ந்த சின்னதம்பி மனைவி ஜானகி என்பவர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பரத் ஆகியோர் தலைமையில் மகளிர் குழுவினர் மற்றும் கட்சியினர் உடன் சேர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது நானும் எனது குடும்பமும் காமயகவுண்டன்பட்டி கிராமம் சர்வே எண் 1372/1-ல் கட்டுப்பட்ட அரசு கல்குவாரியில் வடக்கு பகுதியில் 170 அடி அகலத்தில் கைகளால் கல் உடைத்து, அதனை சிறு துண்டுகளாக்கி விற்பனை செய்து, அதில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு நானும், எனது பிள்ளைகளும் பல ஆண்டுகளாக பிழைத்து வந்தோம். மேற்படி பாறை பகுதியானது எங்களது அனுபவத்தில் தற்பொழுது வரை இருந்து வருகிறது. எங்களது பாறையில் வேலை பார்த்து வந்த பெரியகருப்பன், S/o ஆங்கத்தேவர் என்பவர் பாறை விழுந்து கடந்த 2008-ல் இறந்துவிட்டார். அதற்கு விபத்து நஷ்ட ஈட்டு தொகையாக ரூ.4.5 லட்சம் கொடுத்தோம்.  அதன் பின்னர் அரசு 2012-ல் மேற்படி பாறை உடைப்பதை ...

தேனி மாவட்ட நாடார்கள் கூட்டமைப்பு சார்பில் திமுக எம்.பி.,திருச்சி சிவாவை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  தேனி, ஜூலை.21- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடார்கள் உறவின் முறையின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வினோஜி தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு திமுக எம்.பி, திருச்சி சிவாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களை பற்றி அவதூறாக பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெய் முருகேஷ், அருள் பிரகாஷ், சுரேஷ், கந்தன் உள்பட நாடார் உறவின்முறையை  சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, கடந்த 15.7.2025-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் கு.காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை பெரம்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசும் போது, கு.காமராஜர் அவர்கள் ஏ.சி., இல்லாமல் தூங்க மாட்டார். அவர் உயிர் பிரியும் நில...

கிருஷ்ணன்கோவில் கே.புதூரில் உள்ள ஸ்ரீ தாண்டாய் என்ற சீலக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு திருவிழா: ஆகஸ்ட் 8-ந் தேதி நடக்கிறது

  மதுரை, ஜூலை.18-  விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள K. புதூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தாண்டாய் (என்ற) சீலக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழா நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், தக்ஷனாயின காலம் கிரீஷ்மருதோ ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி (ஆடி மாதம் 23-ம் தேதி) சிறப்பான ஆடி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியும், திருவோண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் நடைபெறுகிறது. K. புதூரில் நம் குலத்தில் உதயமான பெண் தெய்வம் நம்மைக் காக்கும் தாண்டாய் (எ) சீலக்காரி அம்மன் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழாவில் இருளப்பசுவாமி பங்காளிகள், சீலக்காரி வழியில் வந்த பெண் மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் வருகைதந்து அம்மன் அருள் பெற்று இல்லற வாழ்வு சிறக்க அன்புடன் அழைக்கின்றோம். இந்த பெருந்திருவிழா ஆடி 23-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 9.8.2025  ஆடி 24-ம் தேதி சனிக்கிழமை காலை உணவுடன் அம்...

தேனியில் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தேனி, ஜூலை.16- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 123-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வித் திருவிழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு உறவின்முறை தலைவர் தர்மராஜன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். உறவின்முறை உபதலைவர் ஜீவகன், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கணக்கானோர் ரத்ததானம் செய்தனர்.  முன்னதாக மினி மாரத்தான் ஓட்டத்தை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு உறவின்முறை நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து காமராஜர் பிறந்த தின கல்வித்தருவிழா ஊர்வலம், அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் தேனி நகர் பகுதியை சுற்றி வந்தது. இதனை அடுத்து காமராஜர் திருவுருவ சிலை முன்பு...