மலை கிராம குழந்தைகள் 31 பேரை ஜனாதிபதி மாளிகைக்கு பெற்றோருடன் அழைத்து செல்வேன்: தேனியில் நடந்த விழாவில் தங்க தமிழ்செல்வன் எம்.பி., அறிவிப்பு
தேனி, ஜூலை.26-
தேனி மாவட்ட ஆருடெக்ஸ் சொசைட்டி மற்றும் சென்னை நிழற்குடை பவுண்டேஷன் சார்பில் வாங்க படிக்கலாம் என்ற தலைப்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் பாராட்டு விழா தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள சுந்தரம் மஹாலில் 26.7.2025 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு வந்த அனைவரையும் ஆருடெக்ஸ் சொசைட்டி இயக்குனர் ராஜா வரவேற்றார்.
தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர்.விஆர். ராஜன், நிழற்குடை பவுண்டேஷன் அரிசித்ரா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் போது நிழற்குடை பவுண்டேஷன் திட்டங்கள் குறித்து பவுண்டேஷன் சேர்மன் பிரசன்னா ராமசாமி விளக்கி பேசினார்.
விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசி பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சாதனைப்படைத்த குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

இதற்கு மனுவை பெற்றுக்கொண்டு பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தேனி மாவட்டத்தில் 31 மலை கிராமங்கள் உள்ளன. அதனால் கிராமத்திற்கு ஒரு குழந்தை வீதம் அவர்களது பெற்றோர்களுடன் டெல்லிக்கு அழைத்து சென்று ஜனாதிபதி மாளிகை சுற்றி காண்பித்து தேனீர் விருந்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வேன் என உறுதி அளித்தார்.
.......................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments