Skip to main content

Posts

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச்.19- தேனி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக பேரம் பேசி வரி வசூல் செய்தும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரையும் அவருக்கு துணை போகும் ஊழியர்களையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு 19.3.2025 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் அபுதாகிர், சம்சுதீன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சியில் சரிவர குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து போராட்டத்தின் போது குப்பைகளை கொட்டியும்,நகராட்சி ஆணையாளர் மற்றும் அவருக்கு துணை போகும் ஊழியர்களை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.  இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர் அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ந...

தேனியில் இந்து வியாபாரிகள் நல சங்கத்தினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

தேனி, மார்ச்.19- இந்து முன்னணி பேரியக்கத்தின் தேனி வடக்கு மாவட்டத்தின் சார்பு அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா 19.3.2025 அன்று தேனி வாசவி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு பாண்டியன் பட்டாசு கடை நிர்வாக இயக்குனர் குமரேசன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.  விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். விழாவில் தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார், பா.ஜ.க வர்த்தக அணி பிரிவு நிர்வாகி ஜெயராமன் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் போது 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட செயற்கு...

தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில செயற்குழு கூட்டம்

தேனி, மார்ச்.17- இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) மாநில செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தெய்வா ஹோட்டலில் 16.3.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமை தாங்கினார்.  தொண்டரணி மாநில தலைவர் மோகன், பொதுச்செயலாளர் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) நிறுவனர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.  கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முருகவேல், மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், தேனி நகர தலைவர் அழகுமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கும் பணி செயல்படாமல் உள்ள நிலையில் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர...

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மகளிர் தின விழா

தேனி, மார்ச்.10- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரெங்கநாதபுரம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆர் .ரமா பிரபா கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார். ஊக்க மூட்டல் பேச்சாளர் ரத்ன மகாலட்சுமி பயிற்சியாளர்களுக்கு தக்க அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.  அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெ.சரவணன் வரவேற்றார். விழாவில் பயிற்சி அலுவலர் ரமேஸ் மற்றும் மேலாளர் சேதுராமலிங்கம் மகளிர் தினத்தையொட்டி மகளிர் தின சிறப்பு குறித்து வாழ்த்தி பேசினார்கள். இதில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக கோகுல கிருஷ்ணன், துரைமுருகன் கலந்து கொண்டனர் . விழாவின் போது பயிற்சி மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் ஜெ.சரவணன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.  முடிவில் பயிற்றுனர் ஆர். திலகம் நன்றி கூறினார். சசி துரை, சிறப்பு நிருபர்  ...........................

தேனி அருகே உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா

தேனி, மார்ச்.8- தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா 7.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு கள்ளர் பள்ளிகள் உத்தமபாளையம் சரகம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். போடி ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேச பாண்டியன், வட்டார கல்வி அலுவலர்கள் சம்பூர்ணப்பிரியா, ராஜமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பிரதீபா வரவேற்றார். விழாவில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பாலமுருகன், சந்திரசேகர், வட்டார வளமைய கணக்கர் செல்வராணி, முன்னாள் தலைமை ஆசிரியைகள் வாசுகி, சுமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினர்.  விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  முன்னதாக பள்ள...

உத்தமபாளையத்தில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எஸ்.பி., பங்கேற்பு

தேனி, மார்ச்.6- தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பேரணி 6.3.2025 அன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர்  செங்கோட்டு வேலவன், சங்கமம் அறக்கட்டளை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், போடி ஏ.எச்.எம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது இப்ராஹிம் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், க.புதுப்பட்டி நகர் நல கமிட்டி, உத்தமபாளையம் நகர பொதுமக்கள்  மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு  பேரணி தொடர்பாக கூட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பங்கேற்றனர். நாகராஜ், செய்தி ஆசிரியர்  ..........................

தேனி-வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு

தேனி, மார்ச்.6- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6-ந் தேதியில் இருந்து மே 13-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக இயந்திர ராட்டினம் நடத்துதல் உள்பட கண்மலர், உணவுக்கூடம், முடி காணிக்கை ஆகியவைகளுக்கான ஏலம் கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் சக்தி, சதீஸ்குமார், பாபு, குணசேகரன், தங்கத்த...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலுக்கும், அல்லிநகரம் கிராம கமிட்டிக்கும், எந்தவித சம்பந்தமும் இல்லை. சித்திரை திருவிழாவை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்தும்: திருவிழா ஏற்பாடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, மார்ச்.5- தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில் அமைந்துள்ளது.  இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ம் தேதி காவடி (சித்திரை) திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்த கோவில் திருவிழாவின் போது சாமி அலங்கார ஊர்வலம், மேளதாளம், வான வேடிக்கை போன்ற செலவினங்களை அல்லிநகரம் கிராம கமிட்டி முன் நின்று நடத்தி வந்தது. இந்நிலையில் அல்லிநகரம் கிராம கமிட்டி திருவிழாவை எடுத்து நடத்தக்கூடாது என்று கிராம மக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த காரணத்தினால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவிழா நடத்துவது குறித்து பொதுமக்கள், திருவிழா உபயதாரர்கள், பக்தர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனை கூட்டம் 5.3.2025 அன்று மலைக்கோவில் வளாக பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அல்லிநகரம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் பக...

தேனி அல்லிநகரம் நகராட்சியில் வீட்டு வரி விதிப்பு செய்ய லஞ்சம் எதிர்பார்த்து ரசீது போடுவதில் காலதாமதம் : இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி துணைத்தலைவர் குரு ஐயப்பன் குற்றச்சாட்டு

  தேனி, மார்ச்.3- தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் சொத்து வரி குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி காலியிட வரி, குத்தகை வரி, தொழில் வரி, குத்தகை வரி மற்றும் கடை வாடகை மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரியை தானாக செலுத்த முன்வரும் பொதுமக்களிடம் லஞ்சத்தை எதிர்பார்த்து வரி விதித்து ரசீது வழங்குவதில் காலதாமதம் செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பீடு செய்யும் அதிகாரிகள் மீது தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். .............................