Skip to main content

Posts

நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை

தேனி, அக்.12- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு  மாணவர் சேர்க்கை 12.10.2024 அன்று நடைபெற்றது.  நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், வித்யாலயா பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபக்கணேஷ்,  ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள். இதனைத்தொடர்ந்து பள்ளியில் ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்ந்த மாணவ குழந்தைகளுக்கு கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் பூரண செல்வி, துணை முதல்வர் அனுஷா மற்றும் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியை முன்னிட்டு சரஸ்வதி, லட்சுமி, சக்தி ஆகிய அம்மன்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சில கு...

ஆண்டிபட்டியில் தெரிஞ்சா காதலிங்க... படப்பிடிப்பு துவக்கம்

தேனி, அக்.11- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அக்ரி லேண்ட் பிலிம்ஸ்சின் தெரிஞ்சா காதலிங்க... படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  இந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிளப் முருகன் கிளாப் அடிக்க, முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் கேமிராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆண்டிபட்டி 5-வது வார்டு குமரபுரம் பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவது போல் காட்சி எடுக்கப்பட்டது.  இதில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை கோல்டு சந்துரு கவனிக்க, மகேந்திரன் இசையமைக்க, கதை - திரைக்கதை - வசனம் - தயாரிப்பு மற்றும் இயக்கத்தை எம்.கஜேந்திரன் பி.ஏ. ஏற்கிறார். அதுபோல படத்தின் இணை தயாரிப்பாளராக பேச்சியம்மன் கே.எஸ்.சுப்புராஜ், ஜெ. சுமதி மைக்கேல் ராஜ் ஆகியோர் உள்ளனர். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தொழிலதிபர்கள் பி.ஆர்.கண்ணன் மற்றும் மதுரை மைக்கேல்ராஜ் நடித்து வருகின்றனர். சசி துரை, சிறப்பு நிருபர் 

தி‌.மு.க தொழிற்சங்கத்துக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்க முயற்சி : திருப்பூர் துரைசாமி மீது நிர்வாகிகள் குற்றச்சாட்டு

கோவை, அக்.11- கோவையில், தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப். பஞ்சாலை தொழிற்சங்க பிரிவு பொதுச்செயலாளர் சு.பார்த்தசாரதி, முன்னாள் அரசு வழக்கறிஞரும், மாநில சட்டத்துறை இணை செயலாளருமான பி.ஆர்.அருள்மொழி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம்  கூறுகையில்;-  தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப். பஞ்சாலை தொழிற்சங்கத்துக்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டிடம், காலிமனை, கடைகள் என மொத்தம் 46 சொத்துக்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.  இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி, இவற்றை விற்று தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள, தி.மு.க முன்னாள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது செயல், பஞ்சாலை தொழிற்சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. அவர், தி.மு.க-வில் இருக்கும்போது இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். எல்.பி.எப். தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளராக 15 ஆண்டுகள் இருந்துள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து ம....

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அன்பளிப்பாக பீரோ உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்கள்

தேனி, அக்.10- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு வட்டார மருத்துவமனைக்கு பீரோ, மானிட்டர்கள், மூன்று சக்கரவண்டி போன்ற உபகரணங்களை மருத்துவமனை பயன்பாட்டுக்கு ஆண்டிபட்டியில் உள்ள தொழிலதிபர்கள் கவுன்சிலர் பி.சரவணக்குமார் தலைமையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரேமலதாவிடம் அன்பளிப்பாக அளித்தனர். அப்போது தொழிலதிபர்கள் பேரூராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் பி. சரவணக்குமார், ஆர். சிவக்குமார், ஜி.பெரியசாமி, வி.நல்லமாயன், கே.அசோகன்,  டி. முருகானந்தம், ஜி.நாகமலை, எம்.தேவா, சி.வி.சுப்பிரமணியன், (ஓட்டுனர் ) கே.நாகராஜ் (காவல்), எம்.மணிகண்டன் (காவல்) மற்றும் மருத்துவர்கள் ஞான சுந்தரம், லலிதா, சுரேஷ்குமார், ரெஜினால்டு, தலைமை செவிலியர் மணிமேகலை, பொது பிரிவு மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை மருத்துவர் பிரேமலதா மருத்துவ தளவாடப்பொருட்களை வழங்கியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார். சசி துரை, சிறப்பு நிருபர் 

நாடார் சரசுவதி கலை கல்லூரியில், பள்ளி மாணவிகளுக்கான கல்லூரி சாலை-2024 கலை நிகழ்வுகள்

தேனி, அக்.10- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி சாலை-2024 கலை நிகழ்வுகளின் களம் 9.10.2024 அன்று கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் (K3)  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா வரவேற்றார். நிகழ்வில் கல்லூரி செயலாளர் காசிபிரபு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், நீங்கள் வாழ்வின் மிக முக்கியமான திருப்பத்தில் இருக்கிறீர்கள்.  பிளஸ்-2 என்பது வெறும் கல்வியின் முடிவல்ல.  உங்கள் கனவுகளுக்கு புதிய வாயிலாகும்.  கற்றல் என்பது ஒருபோதும் முடிவடையாத ஓர் பயணம். ஆர்வத்தையும் இழக்காமல், ஒவ்வொரு நாளும் கற்றலில் ஈடுபடுங்கள். உற்சாகத்தையும், கற்றல் என்பது வெறும் புத்தக அறிவில் மட்டும் நின்றுவிடக் கூடாது. நீங்கள் கற்றுக்கொள்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவத்தில் மாற்றுங்கள். அதை செயல்படுத்துங்கள். நம் நாட்டின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் சாதனையாக்க முடியும். நம்பிக்கையுடன் தொடங்குங்கள்....

தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாமில் 83 பேருக்கு ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் : கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்

தேனி, அக்.10- தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி வட்டம், அரப்படிதேவன்பட்டியில் உள்ள என்.ஆர்.டி செவிலியர் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் 10.10.2024 அன்று நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன்  முகாமில் மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 83 மாணவர்களுக்கு ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் பேசுகையில், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் மாபெரும் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்கள் மூலம் வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். கல்லூரியில் முதலாமாண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.  மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். கடன் பெற்ற பிறகு அதனை முறையாக திரும்ப செலுத்த வேண்டும். கல்விக்கடன் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள...

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக முத்து சித்ரா பதவி ஏற்பு

தேனி, அக்.10-   தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய டாக்டர் பாலசங்கர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் விஜய் ஆனந்த் தற்காலிக முதல்வராக பதவி வகித்து வந்தார்.  இந்த நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் முத்து சித்ராவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  இதனைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் முத்து சித்ரா பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மருத்துவர்களிடம், முதல்வர் கேட்டறிந்தார். அதன் பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் சென்று ஆய்வு நடத்தினார்...

சின்னமனூரில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் எழுச்சி பேரணி

தேனி, அக்.10- தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நமது இந்தியா, நமக்கான இந்தியா எழுச்சி பேரணி சின்னமனூரில் 9.10.2024 அன்று நடைபெற்றது.  இந்த பேரணிக்கு சின்னமனூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் கலந்து கொண்டு பேரணியின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த பேரணியில் மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி,  மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, வழக்கறிஞர் பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பேச்சாளர் சிவமணி, மாவட்ட செயலாளர் சம்சுதீன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பெரியகுளம் ஹம்சா முகமது, கம்பம் வட்டார தலைவர் ராஜா முஹம்மது,  நகர் காங்கிரஸ் தலைவர்கள் பழனி முத்து, கம்பம் போஸ், தேனி கோபிநாத், ஐ.என்.டி.சி.யு நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். நாகராஜ...

பூச்சி கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தேனி வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை

தேனி, அக்.9- தேனி மாவட்ட விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ் ஆலோசனை தெரிவிக்கையில், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துபவர்கள் அதற்குண்டான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் காலுக்கு ரப்பர் காலணி அணிய வேண்டும். கைகளுக்கு ரப்பர் உறை அணிய வேண்டும். அதுபோல பூச்சி கொல்லி மருந்து காலி டப்பாவை நிலத்தில் வீசக்கூடாது, வீட்டிலும் வைக்கக்கூடாது. மருந்து அடிக்கும் போது நீர்நிலைகளில் படாமல் கவனமாக அடித்தல் வேண்டும்.  அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் பூச்சி கொல்லி மருந்து படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து தெளிக்கும் போது வயதானவர்கள், நோயாளிகள்,  கருவுற்ற தாய்மார்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் பூச்சி கொல்லி  மருந்தை கலக்க குச்சிகளை பயன்படுத்த வேண்டும். வாயால் கலக்கவோ, ஊதவோ கூடாது. மருந்து தெளிக்கும் இடத்தில் உணவு உண்ணக்கூடாது. காற்று அடிக்கும் திசையிலே மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார். நாகராஜ், செய்தி ஆசிரியர்  சசி துரை, சிறப...

போடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒற்றுமை பாதயாத்திரை

தேனி, அக்.8- தேனி மாவட்டம், போடி நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை பாதயாத்திரை போடியில் 7.10..2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு போடி நகர காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி, போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூடலூர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒற்றுமை பாதயாத்திரையின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.  நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, காங்கிரஸ் எஸ்.சி.,. எஸ்.டி., துறை மாவட்ட தலைவர் இனியவன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதயாத்திரையின் போது காந்திய சிந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்பன குறித்து வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கொண்டே சென்றனர். நாகராஜ், முதன்மை நிர...