Skip to main content

Posts

தேனியில் ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவ கண்காட்சி

தே னி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி -2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கண்காட்சிக்கு தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர். ஹனிமன் , விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர்.இராமசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆலோசகர், முன்னாள் தலைவர் டாக்டர். ஜவஹர், தேனி ஆயுஷ் மருத்துவமனை டாக்டர் மாரியப்பன்,  கன்னியாகுமரி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் செயலாளர் டாக்டர்.எபிமோசஸ் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் மதுரை அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர்கள் டாக்டர் பாவலன், டாக்டர்.ஞானபிரகாசம், தேனி ஹோமியோபதி சங்க தலைவர் ஹனிமன் ஹோமியோ மருத்துவமனை டாக்ட...

தேனியில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 10.10.2023 முதல் தொடங்கி 20.10.2023 வரை 8 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் 11.10.2023 அன்று தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 12.10.2023 அன்று ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 13.10.2023 அன்று போடிநாயக்கனூர் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளியிலும், 17.10.2023 அன்று சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி (காலனி), 17.10.2023 அன்று உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், 18.10.2023 அன்று கம்பம் அரசு கள்ளர் துவக்க பள்ளியிலும் (உத்தமபுரம்), 19.10.2023 அன்று பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலை பள்ளியிலும், 20.10.2023 அன்று மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 8 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.   இந்த சிறப்பு மருத்துவ முகாமில்  மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்குதல்,...

தேனி காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் உழவாரப்பணி

இந்து எழுச்சி முன்னணி சார்பில் வாரந்தோறும் கோயில் செல்வோம்"  "உழவாரப்பணி செய்வோம்"என்ற தலைப்பில் 8.10.2023 அன்று  இரண்டாவது வாரமாக தேனி கம்பம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காட்டுபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது. இந்த தூய்மை பணி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்ரேசர்  சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.  இந்த பணியில் நகர பொருளாளர் நாகர்கோவில் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் சிவராம், தேனி நகர செயலாளர்கள் அரண்மனை முத்துராஜ், தினேஷ், துணைத்தலைவர் சிவா, தேனி நகர துணைச்செயலாளர்கள் கனகு பாண்டி, நகர செயற்குழுஉறுப்பினர் கருப்பசாமி, மணிகண்டன் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள்  செய்திருந்தனர். இந்த உழவார பணிகளை இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன். இரவி, மாவட்ட தலைவர் இராமராஜ் ஆகியோர் நேரில்  பார்வையிட்டனர். ராதாகிருஷ்ணன், நிருபர் 

தேனி யூனியன், நாகலாபுரம் சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை பூஜை

தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், நாகலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு சௌந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் ஏகதின பூஜையை முன்னிட்டு பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாக குழு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். கோவில் டிரஸ்டி வி.ஆர்.வெங்கடேசன், பொருளாளர் கணபதி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், தேனி மீனாட்சி விலாஸ் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான பூஜையை பட்டாச்சாரியார்கள்  மணிவண்ணன், சீதாராமன், பாபு உள்பட பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்தனர். இந்த பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன், நிருபர் 

தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியில் புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து, பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.

தேனி மாவட்டம், கோட்டூர் ஊராட்சி பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் திறந்து வைத்து, தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377  பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வுகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, பால் வளம், பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் எஸ்.வினித் ஆகியோர் முன்னிலையில் 7.10.2023 அன்று துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி ஆய்வு மேற்கொண்டார்.  இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார்                  (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்செல்வன், லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   இதில்  கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் இயந்திர...

திருச்சியில் தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் தி.மு.க மகளிர் அணி, திமுக மகளிர் தொண்டர், மகளிர் சமூக வலைத்தள அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 7.10.2023 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். மேலும் மகளிரணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட மகளிர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதோடு வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில், பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் கூட்டமாகவும் நடைபெற்றது.  கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திர...

தேனியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்ட போட்டி: கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்

தேனி மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டியினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, 7.10.2023 அன்று தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து துவங்கி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர். 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து துவங்கி கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம்  வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பேருந்து நிலையம்  வரை ...

தேனியில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்                திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 6.10.2023 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருநங்கைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட்டார்கள் . அதன்படி திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் வீட்டு மனை வேண்டியும்,  கல்வி கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என  பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். அப்போது கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட சம...

கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட கலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் பதிவு செய்து ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில்‌ திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்களால் அண்ணா பிறந்தநாளில் கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள் தொடங்கப்பட்டது. போட்டிகள் இணைய வழியில் தொடங்கப்பட்டு இன்று வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,24,097 மேற்பட்டோர் முயற்சிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 3,32,365 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். தி.மு.க மகளிர் அணி சார்பில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டி, கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. ரூ.35 லட்சத்துக்கு மேல் ரொக்க தொகையை பரிசளித்து ''கலைஞர் 100 வினாடி வினா'' எனும் அறிவு திருவிழாவை நடத்துகிறார் கனிமொழி கருணாநிதி எம்.பி. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் வழிநடத்திய அறிவு புரட்சியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்வதே இந்த வினாடி வினாவின்...

திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 7 ஆம் தேதி திருச்சியில் நடக்கிறது

தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் தி.மு.க மகளிர் அணி மற்றும் தி.மு.க மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வரும் 7ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்குத் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். கலைஞர் நூற்றாண்டை மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட மகளிர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.  அதுபோல இந்த கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும்,பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க...