Skip to main content

Posts

Showing posts from September, 2025

போடி அருகே, மணியம்பட்டி கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தேனி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தேனி, செப்.30- தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர்  ரஞ்ஜீத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை அருகே மணியம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில்  சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்திற்கு சிலமலையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய சாலையானது 36 அடி கொண்டதாகும். ஆனால்  சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்பொழுது 12 அடி சாலையாக மாறிவிட்டது இதனால் இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்வதற்காக வருகின்ற பள்ளி வாகனம் மற்றும் அவசர காலத்தில் மருத்துவ மனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதுபோல தனி நபர் ஒருவர் சுயநலத்திற்காக மின் கம்பத்தை நடு சாலையில் அமைக்க மின்சாரத்துறை  அலுவலர்கள் ஏற்பாட்டில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது மேலும்...

தேனி மாவட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.

தேனி, செப்.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங். 20.9.2025 அன்று குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம். 1035-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம். செட்டிநாடு சேலம், பரமக்குடி திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.  மேலும் நவீன யுக ஆடவ...

தேனி மாவட்டத்தில் சுருளி சாரல் விழா 27.9.2025 மற்றும் 28.9.2025 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

     தேனி, செப்.25-                                               தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் விழா-2025” 27.9.2025 மற்றும் 28.9.2025  ஆகிய இரண்டு  நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மற்றும் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நடைபெற உள்ளது.  தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுருளி சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.  இந்த விழாவில் செய்தித்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கா...

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தேனி எம்.பி., TTS வழங்கினார்.

தேனி, செப்.21- தேனி மாவட்ட உலக அமைதி குழு சார்பில் உலக அமைதி தின விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கி கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  உலக அமைதி குழு பொதுச்செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக அமைதி குழு இயக்குனர் பால்பாண்டி வரவேற்றார்.  விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். விழாவில் தொழிலதிபர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர் மோகன், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சோல்ஜர் அகாடமி இயக்குனர் சின்னச்சாமி, வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணி கார்த்த...

தேனியில் பொறியாளர் தின விழா

தேனி, செப்.18- தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் பொறியாளர் மெல்வின் தலைமை தாங்கினார்.  சங்க பொருளாளர் பொறியாளர் ரவி பாரத் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பொறியாளர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு பேசினார்.  விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் பொறியாளர் தின  வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  விழாவின் போது சங்க கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எம்.எல்.ஏ., சரவணக்குமாரிடம் கொடுக்கப்பட்டது.   1.கட்டுமான பொறியாளர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சில் உருவாக்க வேண்டும். 2. கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். 3.கட்டுமான வரைபட அனுமதி கட்டணம் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக கொடுக்கப்பட்டது.  முடிவில் சங்க செயலாளர் பொறியாளர்.சையது பரூக் அப்துல்லா நன்றி கூறினார். ................................ நாகராஜ், த...

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக-வின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை: மதுரை புத்தக திருவிழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

மதுரை, செப்.14- மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவின் 8-வது நாளான 13.9.2025 அன்று நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்று கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால் தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அ...

தேனி எல். எஸ். மில் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாம்: 181 பேருக்கு செயற்கை கை, கால் மற்றும் சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

  தேனி, செப்.12- சென்னையில் உள்ள பிரீடம் டிரஸ்ட், ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவனம் மற்றும் தேனி எல். எஸ். மில் சார்பில் குழந்தைகள் உட்பட  181 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உபகரணங்கள் வழங்கும் முகாம்  வீரபாண்டியில் உள்ள தேனி எல். எஸ். மில் கலையரங்கில் 12.9.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு எல்.எஸ். மில் சேர்மன் எஸ். மணிவண்ணன்  தலைமை தாங்கினார்.  எல்.எஸ்.மில்  மனித வளத்துறை  துணை பொது  மேலாளர் நிவாஸ் வரவேற்றார்.  ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவன நிர்வாகிகள் லோக பிரம்மன், ராஜீவ் பிரசாத் மற்றும் மைதிலி  பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரீடம்  டிரஸ்ட்  உறுப்பினர் சங்கரன் அன்னா சுவாமி  மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படுகின்ற திட்டங்கள்  மற்றும் கருவிகள் குறித்து  விளக்கினார். தொழில் அதிபர்  கெளமாரி சுதாகரன் வாழ்த்தி பேசினார். முகாமில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 181  மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், செயற்கை கை,  கால்கள், சிறு குழந...

தேனியில் வாசவி கிளப் மண்டல மாநாடு

  தேனி, செப்.8- தேனியில் வாசவி கிளப் மண்டல மாநாடு ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் மண்டல தலைவர் ராஜா தலைமையில், மண்டல செயலாளர் பாலமுருகன், வட்டார செயலாளர்கள் வெங்கடேஷ் மற்றும் பிரதா சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வாசவி கிளப் இன்டர்நேஷனல் முதன்மை நிர்வாக துணைத்தலைவர் பலராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இன்டர்நேஷனல் வாசவி கிளப் தலைவர் ரவிச்சந்திரன், இன்டர்நேஷனல் வாசவி கிளப் துணைச்செயலாளர் லால் பகதூர் சாஸ்திரி, இன்டர்நேஷனல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், சுரேஷ், துணை கவர்னர் சதீஷ், மாவட்ட அலுவலர்கள் விஜி மோகன் சேகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, மாவட்ட துணை மக்கள் தொடர்பு அலுவலர் சுவாதி ஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பொறியாளர் ராதாகிருஷ்ணன், கல்வியாளர்  ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர். இந்த மாநாட்டினை வாசவி கிளப் ஆண்டிபட்டி மற்றும் வாசவி கிளப் தேனி நிர்வாகிகள் நடத்தினர். மேலும்...

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு: தேனியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தேனி, செப்.6- தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்ப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் தேனி பங்களா மேடு நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வெற்றிக்கு வித்திட்ட மாவட்டம், இந்த தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிறைய திட்டங்களை கொடுத்தோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். இந்தப் பகுதி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், அரசு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்பட்டன.  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.  அம்மா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்க...