Skip to main content

Posts

Showing posts from April, 2024

தேனியில் கள்ளர் பள்ளி மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கள்ளர் பள்ளி மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி கொடுவிலார்பட்டி சாலையில் உள்ள திருமலை நகர் மாவட்ட அலுவலக கட்டிடத்தில் 30.4.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பெரியகுளம் சரக வட்டார தலைவர் பாண்டி லட்சுமி, செயலாளர் குபேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் தீனன் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில், மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆசிரியர் கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள்.  கூட்டத்தின் போது கள்ளர் பள்ளியை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க கூடாது என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், கள்ளர் பள்ளி மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் மாவட்ட பொருளாளர் வேணி நன்றி கூறினார்....

தேனி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை நலம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் வராமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் அனைத்து கிராமங்களில் முதல் இலவச தடுப்பூசி முகாம் 29.4.2024 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கான தொடக்க நிகழ்ச்சி தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,, வீரபாண்டி பேரூராட்சி உட்கடை கிராமமான சத்திரப்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டார்.  இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர் பிரசாந்தினி ஜெயசந்திரன், கால்நடை பராமரிப்பு துறை தேனி மண்டல இணை இயக்குனர் கோயில் ராஜா, உதவி இயக்குனர்கள் சுப்பிரமணியன், சிவரத்தினா, பாஸ்கரன், டாக்டர்கள் செல்வம், ரஜினிகாந்த், மோகனப்பிரியா, கண்ணன் மற்றும் ஆய்வாளர் வேல்முருகன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் உள்பட கலர் கலந்து கொண்டனர். இந்த தடுப்பூசி ம...

தேனி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.   விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர். மதளைசுந்தரம்  வரவேற்புரையாற்றி மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவது பற்றியும், கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறதென்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் கல்லூரியில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதென்றும். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராச...

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் எந்திர ராட்டினங்கள் இயக்கப்படும்.  இந்த ராட்டினங்கள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ராட்டினம் அமைக்கும் பணிக்கு கணபதி ஹோமத்துடன் பூமி பூஜை 27.4.2024 இன்று நடைபெற்றது.  இந்த பூமி பூஜையில் அம்மன் அமியூஸ்மென்ட் நிர்வாக இயக்குனர் சக்தி மற்றும் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், குணசேகரன், பாபு, சுரேஷ், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாண்டியன், உதவி ஆசிரியர் 

தேனி என்.ஆர்.டி செவிலியர் கல்லூரியில் மனுநீதி அறக்கட்டளை சார்பில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

கோயம்புத்தூர் மனுநீதி அறக்கட்டளை சார்பில் தேனி-மதுரை சாலையில் க.விலக்கு அருகே உள்ள என்.ஆர்.டி செவிலியர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 5.4.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனு நீதி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷஜீவனா கலந்து கொண்டு அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் தேர்தல் தொடர்பான உறுதி மொழியினை பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள்,  மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்டனர். மேலும் மாதிரி வாக்குச்சாவடி அமைத்தும், தங்கள் முகங்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பதை குறிப்பிட்டும் தேர்தலில் வாக்களிக்க உள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதனை அடுத்...